போஸ்டரில் உமா தர்மனைப் பார்த்ததும் ஏதோ விஜயசாந்தி டைப் படம்னு பயந்து போய் இந்தப் படத்துக்குப் போகாம இருந்தது எவ்வளவு தப்புன்னு இந்த வாரம் தான் தெரிஞ்சது.ரோம்-1ன் அடுத்த எபிசோடுக்காக ஆவலோட காத்துக்கிட்டு இருக்கும் போது,ஏதோ ஒரு குழப்படியின் விளைவா லவ்ஃபிலிம்ல இருந்து இந்தப் படத்தை அனுப்பிட்டாங்க.சரி...அப்படி என்ன தான் இருக்குன்னு படத்தை ஓட்ட ஆரம்பிச்ச பின்னாடி தான் தெரிஞ்சது என் கிட்ட இருக்கிறது படத்தோட ரெண்டாம் பாகம்னு.முதல் பாகத்தைப் பார்க்காம எப்படி ரெண்டாம் பாகம் பார்க்கிறது? உள்ளூர் நூலகத்தில் இருக்குமோன்னு ஒரு சந்தேகத்தோட போனா,பழம் நழுவி பாலில விழுந்த மாதிரி "இன்றைய ஸ்பெஷல்" லிஸ்டில மொத பாகம்.
பொதுவா ஒரு படம் வெற்றி அடைஞ்சிடுச்சுன்னா உடனே அதுக்கு பார்ட்1,பார்ட்2ன்னு எடுத்துத் தள்ளீடுவாங்க.ஆன இந்தப் படம் அதுல ஒரு விதிவிலக்கு.இந்தப் படம் ரெண்டு பாகங்களா வந்ததுன்னா அதுக்கு முக்கிய காரணம் படத்தின் நீளம் தான்.ரெண்டு பாகங்களையும் சேர்த்து படத்தோட ஓட்ட நேரம் கிட்டத்தட்ட நாலரை மணி நேரம்.உமா தர்மன் "the Bride" என்னும் கதாபாத்திரத்தில் நடிச்ச இந்தப் படத்தை எழுதி,இயக்கினது குவாண்டைன் டாரண்டினோ.
குவாண்டைன் டாரண்டினோ எடுத்த பல்ப் ஃபிக்ஷன்,ரிசர்வாயிர் டாக்ஸ் எல்லாம் முன்னாடியே பார்த்திருந்ததனால்,அவருடைய கதை சொல்லும் பாணி கொஞ்சம் பரிச்சயமாயிருந்தது.ரத்தம்,வன்முறை இல்லாம இருக்காது இவரோட படங்களில்.
இதுலயும் அப்படித்தான்,முதல் காட்சியே ஒரு ரத்தக்களரியோட ஆரம்பிக்குது.ஒரு கொலைகாரக் கும்பலில் இருக்கிற நம்ம கதாநாயகிய அவளோட கல்யாண ஒத்திகை அன்னைக்கு துவம்சம் செஞ்சிடறாங்க.எம லோகத்துக்குப் போயி திரும்பி வார கதாநாயகி தன்னைக் கொன்னவங்களைப் பழி வாங்குறது தான் கதை.யார் கொன்னது,ஏன் கொன்னது போன்ற கேள்விகள முதல் பகுதியிலும்,அதற்கான பதில்கள் ரெண்டாம் பகுதியிலும் இருக்கும்.இரண்டு பாகங்களில் மொத்தம் பத்து பகுதிகளாய ஒரு கதை சொல்லப்பட்டிருக்கு.
அட்டகாசமான சண்டைகாட்சிகள்,"lean-mean"ஹீரோயினி,டாப் கிளாசான திரைக்கதையோட வந்த இந்தப் படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.என்ன படத்தில் கொஞ்சம் ரத்தவாடை சாஸ்தி.
சண்டைப்படங்கள் உங்களுக்குப் பிடிக்குமின்னா,இது வரை இதைப் பார்க்கலைன்னா கட்டாயம் பாருங்க,Kill Bill.
எனக்குப் பிடிச்ச காட்சிகள்:
1)வர்னிதாவைக் கொல்லும் முன்னர் வரும் வசனங்கள் ஊடான ஒரு சண்டை
2)க்ரேசி-88 உடன் மோதும் காட்சி
3)திருமண ஒத்திகையின் போது,ஆசுவாசப்படுத்திக் கொள்ள சர்ச்சிலிருந்து வெளியே வரும் உமா,எங்கிருந்தோ காற்றில் வரும் பில்லின் புல்லாங்குழல் இசை கேட்டு உணர்ச்சிவசப்படுதல்
4)பாய் மேயுடனான குருகுலவாசம்
5)BBயுடன் டைனிங் டேபிளில் பேசும் தங்க மீன் பற்றிய வசனங்கள்
6)முத்தாய்ப்பான அந்த இறுதிக் கட்ட சண்டை...
31 July 2007
| [+/-] |
பில்லைக் கொல்லு |
25 July 2007
| [+/-] |
பிரசன்னா - சினேகா - அருண் வைத்தியநாதன் |
அகரதூரிகை என்னும் தமிழ் வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரும்,பல்வேறு குறும்படங்கள் இயக்கியவருமான அருண் வைத்தியநாதன் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைப்பார் போல.
பிரசன்னா-சினேகா-அருண்-எஸ்.பி.பி.சரண்-ப்ரேம்ஜி அமரன் -தாமரை கூட்டணியில் வரும் "அச்சமுண்டு அச்சமுண்டு" வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துகள்...
(இது அந்த அருணான்னு தெரியலை..ஆனால் இண்டியாக்ளிட்ஸ் சொல்லும் குறிப்புகளுடன் ஒத்துபோகிறவர் இவர் தான்னு நினைச்சதால் இந்தப் பதிவு)
21 July 2007
| [+/-] |
சுப்பு & ருக்கு - 1 |
கடந்த ஏழு மாதங்களாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சுப்புவும் ருக்குவும் தங்களது முதலாமாண்டு கல்யாண நினைவுநாளை வெகு விரைவில் கொண்டாடவிருக்கின்றனர்.
சுப்பு: அது வந்து....சொல்லும்மா...இப்போ என்னோட வாட்சில மணி 10.02
ருக்கு:அதெல்லாம் கரெக்டா சொல்லு.9.28க்கு ஒரு தடவை கால் செஞ்சேன்.பிஸின்னு வந்தது.9.5க்கு கால் செஞ்சேன்.மறுபடியும் பிசி.உடனே 9.53க்கு ஒரு மெயில் அனுப்பினேன்.இன்னும் அதை நீ ஓப்பன் கூட செஞ்சு பார்க்கலை.யார் கூட காபிக்கு போனே?கிளியோபாட்ராவா இல்லை அந்த மூக்கழகியா?
சுப்பு:இது கொஞ்சம் ஓவர் ருக்கு.எனக்கு இன்னைக்கு 9-10 ஆன்ஷோர் டீமோட மீட்டிங் இருக்குன்னு நேத்தே சொன்னேன் இல்லை..அதை முடிச்சுட்டு இப்போ நேரா சீட்டுக்கு தான் வரேன்.ஆமா ஏதாவது சீரியசான மேட்டரா??
ருக்கு:bugல்லாம code எழுதத் துப்பில்லை.இதில ஆன்ஷோர் டீம் மீட்டிங் வேற.நேத்து உன்னை ஒரு module கொடுத்து code பண்ணச் சொன்னேனே,அதை எனக்கு அனுப்பும் முன்னாடி test செஞ்சியா??
சுப்பு:ஆங்...அது வந்து... ஒண்ணுக்கு ரெண்டு test வாட்டி செஞ்சேனே ருக்கு.அந்தக் கோடில ஏதாவது பிராப்ளமா??(இந்த கூகிள் கடங்காரன் காலை வாரிவிட்டுட்டான் போல இருக்கு..இப்போ மேட்டரை ஓரம் கட்டணுமே..எப்படி???)
ருக்கு:நீ கொடுத்த கோடில நாலு bug இருக்குன்னு மெயில் வந்திருக்கு.உருப்படியா நாலு வரி code எழுத வராது;இதில பேர் மட்டும் பெரிசா பிஸினெஸ் அனலிஸ்டுன்னு.ஏதோ என்னோட லீட் லீவில போனதால சமாளிச்சுட்டேன்.அது சரி..நீ வீட்டை விட்டு வர்ரச்சே கேஸ் எல்லாம் பார்த்து ஆஃப் செஞ்சிட்டு வந்தியா??
சுப்பு:அதெல்லாம் கரெக்டா செஞ்சிட்டேண்டா.(உஷ்..அப்பாடா.விஷயம் வேற ட்ராக்குக்கு மாறுது.)
ருக்கு:நான் வாஷிங்மெஷின்ல போட்டிருந்த என்னோட துணிகளை எல்லாம் காயப்போட்டியா??பாலை எடுத்து மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சுட்டியா??
சுப்பு:(அய்யய்யோ..இந்த துணி மேட்டர் சுத்தமா மறந்து போச்சே.ஹூம்...அந்த நேரம் பார்த்துதானா சன் ம்யூசிக்ல "நிலவைக்கொண்டு வா..கட்டிலில் கட்டிவை" போடணும்)ஆச்சு..எல்லாம் செஞ்சிட்டுதாண்டா வீட்டை விட்டுக் கிளம்பினேன்...எதுக்கு வீணா நீ டென்ஷன் ஆகறே?? ஆமாம்.நீயே டிசைன் செஞ்ச சுடிதாரை இன்னைக்குப் போட்டுட்டுப் போனியே.அதை பத்தி தான் இன்னைக்கு உங்க ஆஃபிஸில ஒரே பேச்சாமே??
ருக்கு:அய்யோ....ஆமாம்பா....இது உனக்கு எப்படித் தெரிஞ்சது???டோரிக் கண்ணு வெங்கி கூட இன்னைக்கு இதைப் பார்த்து வொண்டர்ஃபுல்லுன்னு சொல்லுச்சி.இன் ஃபாக்ட் எங்க டீமில புதுசா சேர்ந்திருக்கிற ஃப்ரஷர்ஸ் இதுக்காக என்னை ட்ரீட் தரச் சொல்லியிருக்காங்க.நானும் வர சனிக்கிழமை அவங்களை வீட்டுக்குக் கூப்டிருக்கேன்.பாவம் பசங்க.புது ஊர்.புது மனுஷங்க.அவங்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் தானே??
சுப்பு:(அப்பாடா..ஒரு வழியா ட்ராக்கை மாத்தியாச்சு...)ஆமாம் ருக்கு.you are very correct, as always. நம்ம ரிஷப்சனுக்கு முதலில் நீ எடுத்த சேலை கூட இந்த ராமர் ப்ளூ கலர் தானே?
ருக்கு:சுப்பூ...கொஞ்சம் கூட உனக்கு கலர் சென்ஸே இல்லை.First of all இன்னைக்கு நான் போட்டுட்டு வந்த சுடிதார் கலர் ராமர் ப்ளூ இல்லை.அது ராமர் க்ரீன்.Secondly ரிஷப்சனுக்கு முதல்ல எடுத்த சேலை கலர் ஆலிவ் க்ரீன்.ஒரு வருஷம் கூட ஆகலை.அதுக்குள்ள எல்லாமே மறந்திடுச்சி உனக்கு.....
சுப்பு:(அய்யயோ..இதென்ன புதுக்கதை....ஏதாவது சொல்லி சமாளிடா...)ஆங்...அது வந்து..எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.உனக்கு மறந்திடுச்சான்னு டெஸ்ட் பண்ணிப்பார்த்தேன்.ஹி...ஹி....அப்புறம் உங்க பாலு மாமா தசரா லீவுக்கு இங்கே ஃபேமிலியோட வரார்னு சொன்னேல்லியா? ஏதாவது டூர் பிளான் செய்யட்டுமா??(ஹூம்.சூப்பராப் பாயிண்டைப் புடிச்சுட்டியேடா...)
ருக்கு:அடப்பாவி.போன சண்டே தானே அவரோட மாமனாருக்கு KMCH ல பைபாஸ் செய்யணும்னு ஃபோன் பண்ணி சொன்னாரு.நீ கூட உன்னோட ஸ்கூல் மேட் பிபின் அந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கான்னு சொல்லீட்டு இருந்தியே??அப்போ அதெல்லாம் ரீலா?? சரியான டுபாக்கூர் பார்ட்டி நீ...get lost....
சுப்பு:(சோதனை மேல் சோதனை..போதுமடா சாமி)ருக்கு..ருக்கு..ப்ளீஸ்..அது ரீல் எல்லாம் இல்லை..ருக்கு...லைனைக் கட் செஞ்சிட்டியா???ஹூம்....
(தொடரலாம்)
| [+/-] |
நம்ம ஊரு,நல்ல ஊரு - 1 |
அது என்ன அவ்வளவு பிரபலமான ஊரா என்று யாரிடமாவது கேட்டால் போதும், ஜீ.டி.நாயுடு, சிறுவாணித் தண்ணீர், PSGCTCIT செட்டுகள், சிறுதுளி திட்டம், செழிய, சிவகுமார, மணிவண்ண, சத்ய சுந்தர பாக்கிய ராஜ வகையறாக்கள்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா, நரைன் கார்த்திகேயன், குர்லா எக்ஸ்பிரஸ், பிளாக் தண்டர் என்று சங்கிலித் தொடர் போலே நீளும் பதில்கள்.
நம் ஊரைப் பத்தி நம்மளோட கருத்துகளும், மதிப்பீடுகளும் எப்பவுமே ஒரு தலைப் பட்சமாகவே இருக்கும்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சும்மாவா சொன்னாங்க.கோயமுத்தூரைப் பத்தி வெளியூர்க்காரங்க என்ன தான் சொல்றாங்கன்னு பார்ப்போம்
ஐகாரஸ் பிரகாஷின் பார்வையில்:வகை தொகையில்லாமல், மானாவாரியாக கெட்ட வார்த்தைகளை - அதன் நிஜ அர்த்தம் தெரியாமலேயே - அள்ளித்தெளிக்கும் கூவாங்கரையில் பிறந்த வளர்ந்த ஒருவனுக்கு,கோயமுத்தூர் தரும் தரும் அதிர்ச்சிகள், இன்பமானவை. அந்த அதிர்ச்சிகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.என்னமோ, எனக்கு கோவை என்று சுருக்கமாகச் சொல்வதைவிட, கோயமுத்தூர் என்று நீட்டி முழக்கிச் சொல்வதுதான் பிடித்திருக்கிறது.
கோயமுத்தூர் என்றவுடன் சட்டென்றுநினைவுக்கு வருவது என்ன? லக்ஷ்மி மில்ஸ் வளாகம்? மருதலைக் கோயில்? சுகுணா மோட்டார் கம்பெனி ? நிர்மலா காலேஜ் பெண்கள் ? அங்கண்ணன் கடை ? டேக் ஓவர் டைக்கூன் பி.ஆர்.ராஜரத்தினம் ?கோக்குமாக்கானவடிவத்தில் இருக்கும் ஃப்ளைஓவர் ? அநியாயமாக விமான விபத்தில் செத்துப் போன கரிவரதன் ? ராஜ்யஸ்ரீ பதி ? சிறுவாணி ? இல்லை... இதல்லாம் பிறகுதான்... முதலில் நினைவுக்கு வருவது அந்த ஊர் மக்களும், அவர்கள் பேசும் கொங்குத் தமிழும் தான்.
பாரதியார் பல்கலை எம்பிஏ நுழைவுத் தேர்வு எழுதச் சென்று, கேள்வித் தாளுக்காக காத்திருக்கும் போது என்ன வரும்? ஒழுங்காகத் தேர்வு எழுதி சீட்டு கிடைக்குமா என்ற நடுக்கம் வரும் அல்லது RAC டிக்கட் கன்ஃபர்ம் ஆகுமா யோசனை வரும். எனக்கு தூக்கம் தான் வந்தது. (இரவில் பன்னிரண்டு மணி நேர பேருந்துப் பயணம் + கௌரிஷங்கரில் 'பாத்தி கட்டி அடித்ததன்' விளைவு). கேள்வித் தாள் விநியோகம் செய்து கொண்டு வந்த நுழைவுத் தேர்வு பொறுப்பாளர், தட்டி எழுப்பி, "பரீட்சை ஆரம்பிச்சுடுச்சுங்க, பயணக் களைப்புங்களா? மொகம் கழுவிக்கிட்டு வந்து எழுதறீங்களா ?" என்று எந்த விதமான நக்கல்/கிண்டலுமில்லாமல் சாதாரணமாகக் கேட்டவர், கோயமுத்தூர் மக்கள்ஸின் ஒரு ரெப்ரசெண்டேடிவ் சாம்பிள் என்று தான் தோன்றுகிறது. வாங்க, போங்க என்று மரியாதையுடன் அழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களையும், தமிழில் பேசும் bartender களையும் அங்கே தான் ஒரு சேரப் பார்க்கலாம்.
கேஜி வளாகத்தின் அருகே இருக்கும் பழமுதிர்ச்சோலையின் கிளை ஒன்று, சென்னையில் சாலிக்கிராமத்தில் துவங்கப்பட்டிருக்கிறது. சரி, போய்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தவுடன், வரவேற்பு, "வா சார், இன்னா வோணும்?"
பூவோடு சேர்ந்த நார், மணக்குமா அல்லது நாறுமா என்பதை யார் சொல்ல முடியும்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே...??? (பின்னூட்டங்களின் வாயிலாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ).
17 July 2007
| [+/-] |
சொன்னாங்க...சொன்னாங்க... |
இந்த உலகம் ஒரு நாடக மேடை என்னும் கருத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள பெரும்பான்மையான தமிழர்களைப் பொருத்த மட்டிலும் நிழலும் நிஜமும் ஒன்றே.அப்படி நிழலிலும்,நிஜத்திலும் பேசப்பட்ட சில வசனங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
யார் சொன்னது?? எந்த சூழ்நிலையில் சொன்னது???
1)பி.பி.சி.க்கு பேட்டி வழங்கியது மகிழ்ச்சி தரும் அனுபவமில்லை
2)வெவரம் தெரியாதவனுக்கு பொண்டாட்டியா இருக்கிறதை விட,விவரம் தெரிஞ்சவனுக்கு வப்பாட்டியா இருக்கலாம்.
3)வேட்டைக்காரன் வர்ரான்..உஷாரா இருந்துக்கோங்க...
4)அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் எராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி பட்ட ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணத்தை தொடர்கிறேன்.
5)இவங்க மறுபடியும் ஆட்சிக்கு வந்தா அந்த ஆண்டவனால கூட தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாது...
6)'நான் செத்ததுக்குப் பொறவு தான் இந்த கல்யாணம் நடக்கும்.'
'அது வரைக்கும் என்னால காத்திட்டிருக்க முடியாது'
7)இந்த உலகத்திலேயே ரொம்பவும் கொடுமையான விஷயம் எது தெரியுமா? மத்தவங்க நம்மளை மறந்து போறது தான்
பி.கு:- எனக்கு கேள்வியின் நாயகன் என்னும் பட்டம் தரப்போவதாகக் காத்து வாக்கில் உலவும் செய்தி பற்றி அனைவரும் இன்னேரம் அறிந்திருப்பீர்கள்.அந்தப் பட்டம் சூட்டும் விழாவில் எனக்குத் தரப்படும் பொற்கிழிக்காக உங்களது பங்களிப்பை நீங்கள் செய்ய விரும்பினால்,அணுக வேண்டிய முகவரி எது என்று உங்களுக்குக் தெரியும் தானே???
09 July 2007
| [+/-] |
நான் யார்? நான் யார்? நான் யார்? |
1)என்னோட அண்ணாவும் தன்னோட ஆரம்பகால வாழ்க்கையை மீடியா துறையில தான் ஆரம்பிச்சார்.எங்க அப்பாவுக்கு இருந்த செல்வாக்கு,அரசியல் பலம்,வியாபார நெளிவுசுளிவுகள் காரணமா எங்கோ இருந்த நாங்க இன்னைக்கு இருக்கிற இடத்தை நினைச்சுக் கூட பார்க்க முடியலை.நாளைக்கு அழிவில்லைல வந்த எலியட் கார்வர் கதாபாத்திரம் எங்க அப்பாவைத் தாக்கி இருக்குன்னு எங்கோ படிச்ச ஞாபகம்.அப்புறம்,2003ல நான் பதவிக்கு வந்தப்போ இருந்த சர்ச்சை இப்போ சுத்தமாக் குறைஞ்சிருச்சு.
2)1982ல் வெளியாகி உலக புகழ்வாய்ந்த அந்தப் படத்திலே நடிக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.என்னோட படத்தைப் பத்தி வேட்டையாடு விளையாடுவில ஜோதிகா ஏதோ சொல்லியிருக்காங்களாமே,அது நிஜமா? நாலு குழந்தைகளுக்கு அப்பாவான என்னோட இயற்பெயர் கிருஷ்ணா பான்ஜி.
3)மார்ச் 1976ல் இருந்து ராஜ்யசபா எம்.பி.ஆன போதிலும் எனக்கு அமைச்சர் பதவி கிடைச்சதென்னமோ 29 ஜனவரி 2006ல் தான்.நான் 1943ல் லாகூர்ல பிறந்தேன்.உங்க ஊர்ல கூட என் பேர்ல ஒரு நடிகை எண்பதுகளில் கலக்கிட்டு இருந்தாங்களாமே,உண்மையா?
4)இந்த அம்மா குச்சிப்புடி,பரதம் நல்லா ஆடுவாங்கன்னு என்னைப் பத்தி எழுதறவங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் நான் IIM-A அலுமினி என்பது.காலேஜில பசங்க பேப்பர்ல விட்டுக்கிட்டு இருக்கிற அந்த விஷயத்தை நம்ம இந்தியாவில சாதிக்கக் காரணமாக இருந்த அந்த நிறுவனத்தை உருவாக்கினதில எங்க அப்பாவுக்கு ஒரு பெரும்பங்கு இருக்கு.என்னது..?நரேந்திர மோடியா...ஆளைவிடுங்கப்பா...
5)ஜாக்கிசான் 80நாட்களில் உலகம் சுற்றிய பயணத்தின் போது நான் தான் ஹாட் ஏர் பலூன் ஓட்டுனர்.உங்க ஊர் தினத்தந்தி சிந்துபாதுக்கும் எனக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கு.2006ல் நான் ஆரம்பிச்ச அந்த காமிக்ஸ் நிறுவனத்தில் சேகர்கபூர் சித்திரக்காரராய் இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா?
05 July 2007
02 July 2007
| [+/-] |
என்னைப் பற்றி ஒரு எட்டு |
"சிவாஜியின் வருகையும் தில்லி அரசியலில் அதன் விளைவுகளும்" என்னும் தலைப்பில் சீஸனல் பதிவு ஒண்ணு போட்டு ஹிட் கவுண்டைக் கூட்டலாம்னு நினைச்சுட்டு இருந்த நேரத்தில் இப்போ நடந்திட்டு இருக்கிற எட்டு வெளையாட்டு ஆட காதல் முரசுவும்,தேவும் கூப்பிட்டு இருக்காங்க..
ஃப்ளேப்ஜாக் திங்க கூலியான்னுட்டு எழுத ஆரம்பிச்சேன்;எழுத ஆரம்பிச்சேன்;எழுதினேன்;எழுதினேன்;இன்னும் எழுதிட்டே இருக்கேன்.நம்ம சோம்பேறித்தனம் தான் உலகப்பிரசித்தி பெற்றதாச்சே...
சரி..சரி..விஷயத்துக்கு வருவோம்.
(1)முதல் கனவு: சின்னப் பையனா தாத்தா ஊரில வளர்ந்த போது,மாதம் ஒரு முறை என்னைக் கூட்டீட்டு தாத்தா சூலூர் வருவார்.பழனியில இருந்து உடுமலை வரும் வழியில் மடத்துக்குளத்துக்கு முன்னாடி ஒரு லெவல் கிராசிங் இருக்கும்.ஒரு குறிப்பிட்ட பஸ்ஸில ஏறினா,அந்த லெவல் கிராசிங் புண்ணியத்துல ரயில் பொட்டிகளைப் பார்க்கலாம்.எங்க தாத்தா என்னை அந்த பஸ்ஸுக்குத்தான் கூட்டிட்டி வருவாரு.எனக்கோ ரயில் பெட்டிகளை விட,இரண்டு பக்கமும் பல்வேறு வாகனங்களை நிறுத்தின லெவல் கிராசிங் கேட்டு மேல தான் ஒரு கண்ணு.நான் படிச்சு பெரியவன் ஆனவுடனே,அந்த லெவல் கிராசிங் கேட்மேனாகத் தான் வருவேன்னு கொஞ்ச காலம் சொல்லீட்டு இருந்தேனாம்.ரயில் அந்த ரூட்டில வரலேன்னா அந்த லெவல் கிராசிங்குக்கே வேலை இல்லைன்னு தெரிஞ்ச போது,அந்த ரயிலில் ட்ரைவராகவோ,கண்டக்டராவோ இல்லை க்ளீனராகவோ ஆகப் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சேன்.முதல் முறையா ரயிலில் பிரயாணம் செஞ்ச பிறகு,அந்த ரயிலில் டீ விற்பனை செய்யும் ஆளாக ஆகப்போறேன்னு சொன்னது இன்னும் நினைவுல இருக்கு.ஹூம்..கடைசியில் இப்போ இங்கே வந்து ஆணி புடுங்கணும்னு என்னோட தலையில எழுதியிருக்கிறதை மாத்த முடியுமா??
(2)வியாபார காந்தம்:இப்படியாகத் தானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த யாம் ஒரு சுபயோக சுப தினத்தில் சூலூர் மக்களின் மனக்கேதத்தினைத் தீர்க்கும் பொருட்டு,சூலூரில் எழுந்தருளினோம்.அடச்சீ...சொல்ல வந்த மேட்டரைச் சொல்லாம மொக்கை போடறானேன்னு திட்டறது கேக்குது. சூலூரில எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த காலிவீட்டுல திடீர்னு செமையான கூட்டம்.யாரோ காமாட்சி பீடத்தின் ஆஸ்தான அடிகள் அந்த வீட்டுக்குக் குடி வந்ததனால் எங்க ஏரியாவுக்கே கொஞ்ச நாள் செம்ம மௌசு வந்திடுச்சு.முழுப் பரிச்சை லீவுக்கு என்ன செய்யலாம்னு நகத்தைக் கடிச்சிக்கிட்டு இருந்த சோக்காளிகளுக்கு என்னோட அந்த ஐடியா மொதல்ல கூமுட்டைத்தனமாத்தான் பட்டது.ஆனா வெயில் காலம்,வர்ர ஆளுங்களோட எண்ணிக்கை, சீப்பான ப்ரொடெக்ஷன் காஸ்ட்,அதிக லாபம், தவிரவும் வெட்டுப்பட்டான் குட்டையில நடக்கிற கிரிக்கெட்டு மேட்சுக்கு ட்ரிங்ஸ் ஸ்பான்ஸர் அப்படின்னு கலர் கலரா நான் சொன்னதை நம்பி ஆரம்பிக்கப்பட்டது தான் "சூலூர் கோலா". எலுமிச்சை சூசுக்கு நாங்க வச்ச பேரு அது தான்.நல்லாத்தேன் போச்சு.ஆனா எங்க கெட்ட நேரம் ...ஹும்..மீதிக் கதையை இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம். சப்ளை அண்ட் டிமாண்ட் அப்படின்னு பல ஜல்லிகள் தெரியாத அந்த நாளில் எனக்குள் தோணின அந்த ஐடியாவை செயல்முறைப்படுத்தி லாபமும் சம்பாரிச்சதை நெனச்சா இன்னைக்கும் புல்லரிக்குது.
(3)சுயமரியாதை: அட.இது டிடில மதியம் போடுற மெகா தொடரோட பேர் இல்லைங்க.நான் கொஞ்சம் கௌரவம் பார்க்கிற ஆளு.நண்பர்கள் கிட்டே பார்க்க மாட்டேன்.ஆனா சொந்தக் காரங்ககிட்டே அதிகம் பார்ப்பேன்.எனக்கு மண்டைக்கனம் ஜாஸ்தீன்னு இதனால் அவங்க சொல்லீட்டுப் போனாலும்,யாருக்காகவும் இதனை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.நம்மளை நாமளே மதிக்கலைன்னா யாரு மதிக்கப் போறாங்க சொல்லுங்க??
(4)சினிமா பைத்தியம்: தியெட்டரில் பார்த்த முதல் படமான"பயணங்கள் முடிவதில்லை"யில் ஆரம்பித்தது இந்தப் பைத்தியம்.மின்சாரக் கனவு வேண்டாம்டா, இருவர் போலாம்னு சொன்னப்போ எல்லாரும் என்னை மொறச்சதைச் சொல்லவா,இந்தியன் ஓப்பனிங் ஷோ பார்க்க டிக்கெட்டுக்கு அலைஞ்ச கதையைச் சொல்லவா,"Love actually"பார்த்திட்டு அதனோட திரைக்கதை format பத்தி மூணு மணிநேரம் செந்தில் கூட மொக்கை போட்டதைச் சொல்லவா.??அப்படி ஒரு சினிமா பைத்தியம் நான். ரசனைகளில் மாற்றம் வந்த போதும், கரகாட்டக்காரனை ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது பார்க்காம தூக்கம் வருவதில்லை.
(5)பொறுப்பான பையன்:எங்க அப்பாவோட அருமைச்சினேகிதர் ஒருவர் எப்போ பார்த்தாலும் என்னைப் பத்தி ஏதாவது நொணை நாயம் சொல்லீட்டே இருப்பார்.அப்படிப்பட்ட அவர்கிட்டயே "கலக்கீட்டயே தம்பீ..." அப்படின்னு பேர் வாங்கிற மாதிரி திட்டமிட்டு செஞ்ச உடம்பொறப்போட கல்யாணம்,மறக்கவே முடியாது.நிச்சயம் முடிஞ்சு இருபதாவது நாள் கல்யாணம்.பயங்கரமா பிளேன் செஞ்சு,பேக்கப் ஏற்பாடுகளைப் பத்தி தீவிரமா யோசிச்சு செஞ்ச நிகழ்வு இது.கல்யாணத்தன்னைக்கு எங்க அப்பா முகத்தில இருந்த அந்த சந்தோஷத்தயும்,எம் மகன் சாதிச்சுட்டான்கிற பெருமித உணர்வையும் பார்க்கிறப்போ இன்னுமொரு உடன்பிறப்பு இருந்திருக்கக் கூடாதுன்னு ஏக்கந்தான் வருது.
(6)கிச்சன் கில்லாடி:இன்னும் ஒரு மாசத்துல அட்டகாசமா சாம்பார் செஞ்சு காமிக்கறேன்னு போட்டீல குதிச்ச அப்புறம் தான் சமையல் இவ்வளவு கஷ்டமான விஷயமான்னே தெரிய வந்தது.எப்படியோ..முட்டி மோதி ஒரு வழியா சமையலும் கத்துக்கிட்டாச்சு.இப்போ சமையல் என்னோட பேஷன்(passion)னு டயலாக் அடிக்கற மாதிரி சமையலிலும் தேறியாச்சேய்.ஊருக்குப் போனா இப்போ அய்யா தான் டீ போடறது.என்னைக் கேட்டா சமையல் நல்லாச் செய்யிறவங்க, நல்ல பொறுமைசாலியா இருப்பாங்கன்னு தான் சொல்லுவேன்.பெங்களூரில் ஒரு சாப்பாட்டுக்கடை போடலாம்னு கொஞ்ச நாளா யோச்சிட்டு இருக்கோம்.
(7)அட்வைஸ் அண்ணாசாமீஸ்: "காதல்ங்கிறதெல்லாம் மாயை.பிராக்டிக்கலா யோசீ"அப்படீங்கற வசனத்தை எங்க காலேஜ் பக்கம் போன நூற்றாண்டில கேட்டிருந்தீங்கன்னா நீங்க கட்டாயம் அ.அண்ணாசாமிக்களைப் பார்த்திருக்கீங்கன்னு அர்த்தம்.அது வேற யாருமில்லை.அடியேனும் அடியேனோட நண்பர் குழாமும் தான்.பாலகுமாரனோட நாவல்கள் படிச்சிட்டு பசங்க மத்தியில டயலாக்கா அடிச்சு வுட்டுட்டு இருந்த காலம் அது.எந்தப் பையனாவது எந்தப் பொண்ணுக்காவது ரூட்டு வுடறான்னு தெரிஞ்ச உடனே,அவனைப் புடிச்சு இந்த மாதிரி ஒரு நாலஞ்சு வஜனத்தை அள்ளி விடாட்டி எங்க கும்பலுக்கே தின்ன சோறு சீரணம் ஆகாது.இப்படி நாங்க பிரிச்சு விட்ட ஜோடிகள் ஏராளம் . காதலிக்கத் தேவையான மன தைரியம் இல்லாத எங்களை ஐடியா அண்ணாசாமீஸ்னு கற்பனை செஞ்சிட்டு அட்வைஸ்ங்கிற பேர்ல நாங்க செஞ்ச அலப்பறையை எப்போ நினைச்சாலும் சிரிப்புதான் வரும்.
(8)அதீத ஞாபக சக்தி:மூணாம் வகுப்பில கணக்குப் பாடம் எடுத்த டீச்சரோட வீட்டுக்காரர் பேரில் இருந்து,ஸ்பீடு படம் இந்தியாவில வெளியிடும் போது ஸ்டார் நிறுவனம் வைச்ச போட்டியில் இருந்து,அழ.வள்ளியப்பா காலமாகும் போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர் யார்ங்கிற வரைக்கும் குத்து மதிப்பா ஞாபகத்துக்கு இருக்கும்.ஆனா என்னோட யாஹீ மெயில் பாஸ்வேர்ட்,எங்க வீட்டு லேண்ட்லைன் நம்பர்,எங்க அப்பாவோட வண்டி நம்பர் போன்ற விஷயங்கள் தான் அடிக்கடி குழப்பும். எண்களை விட முகங்களும்,பெயர்களும் அவ்வளவு சீக்கிரமா மறந்திட மாட்டேன்.
இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்.
1)இளவஞ்சி
2)ஸ்ருசல்
3)யாத்ரீகன்
4)கேவீஆர்
5)ரம்யா நாகேஸ்வரன்
6)செல்வேந்திரன்
7)சந்திரவதனா
8)கோ.கணேஷ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
24 June 2007
| [+/-] |
என்ன படம்? என்ன பாடல்? #6 |
1)ஏலா.. முத்தம்மா உம்மனசு எங்கிட்டு
எங்கிட்டதான் சொல்லுடி அம்மா
2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று
3)நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது
4)வான் இங்கே..நீலம் அங்கே...
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ??
5)காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
6)நீ உண்டு உண்டு என்றபோதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா..
7)இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோகநாத ராகம்
இந்த ஏழை பாடும் வேதம்
8)தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கில்லையோ...
அன்னைத் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ...
9)ஒருவன் இதயம் உறங்கும் நிலையில்
அறியாக் குழந்தை நீ வாழ்க...
10)நான் மூணு மெத்தை மாடி கட்டி
மாடி மேல உன்னை வச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ...
| [+/-] |
ஞாயிறு செய்திகள் |
ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஊரில் இருந்தாலும் செய்தித் தாள் வாசிக்காமல் எனக்கு சோறு இறங்காது.எங்கள் ஏரியாவில் சில கழுதைகளின் ஜீவனம்,எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கும் செய்தித்தாள்களை நம்பியே ஓடிக்கொண்டிருக்கிறது என்று அம்மா சொல்வது உண்மையோ..என்னவோ??.தினமணி,தினமலர்,தினகரன்,இந்து,இண்டியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டைம்ஸ்,டெக்கான் ஹெரால்ட் என்று சங்கிலித்தொடர் போலே நீளும் எங்களது ஞாயிற்றுக்கிழமைகளின் செய்தித்தாள் பட்டியல்.
மற்றநாட்களில் மருந்துக்கும் தொட்டுப்பார்க்காத இண்டியன் எக்ஸ்பிரசை உச்சி முதல் உள்ளங்கால் வரை புரட்டுவது ஞாயிற்றுக்கிழமையில் தான்.பரத்வாஜ் ரங்கனின் சினிமா விமர்சனம்,எல்.சுரேஷின் முக்கிய கட்டுரை,வாணி கணபதியின் டீன் அட்வைசுகள்,படிக்க சுவாரசியமாக இருக்கும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்று ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வைத்தார்கள்.இங்கே வந்தபிறகும் இந்த ஞாயிறு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் போகவில்லை.இந்தப் பத்திரிக்கை வாங்கினால் இந்த டிவிடி இலவசம்;இது வாங்கினால் இந்தப் புத்தகம் இலவசம்;இது வாங்கினால் இந்த வாலெட் இலவசம் என்று மூன்று பவுண்டுகளுக்கு செய்தித் தாள்களையும்,10 பவுண்டுகள் மதிப்புள்ள இலவச இணைப்புகளையும் வாங்கிய பின்னர் ஏற்படும் பரவச நிலை இருக்கிறதே..ஹூம்..அதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது ஓய்...
அப்படி இன்றைக்கு வாங்கிய செய்தித் தாள்களில் இருந்து சில சுவாரசியமான செய்திகளைக் கீழே தந்துள்ளேன்.
வரும் புதன்கிழமையன்று பதவிலிருந்து செல்லவிருக்கும் டோனி பிளேர் அடுத்து என்ன செய்யப்போகிறார்,என்ன செய்யலாம் என்று ஆள் ஆளுக்கு கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.அதே போல் அன்று பதவியேற்கவிருக்கும் கார்டன் பிரௌனின் அமைச்சரவையில் இளம்ரத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்போதுள்ள 23 பேர் அமைச்சரவையில் இருந்து குறைந்த பட்சம் 9 பேராவது நீக்கப்படுவது உறுதி என்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் முதல்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினரிடையே கிறித்துவ மதக்கொள்கையைப் பரப்பும் வகையில் "Mixing it up with the Simpsons"என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளதாம்.இது மிகவும் பிரபலமான சிம்ஸன்ஸ் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியாகும்.பல பெருந்தலைகள் இந்த முயற்சியினை வரவேற்று பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி எந்த ஒரு செய்தித்தாளிலும் செய்தி வரவில்லை.மாறாக 2010ல் புதுதில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு அங்குள்ள பிச்சைக்காரர்களை சிறையில் அடைக்கும் திட்டம் பற்றி ஒரு பெரிய கட்டுரையே வந்துள்ளது;ஒரு பிச்சைக்காரரின் முழு வண்ணப்படத்துடன்.
நாளை துவங்கவிருக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்,அடுத்த மாதம் இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் தற்போதைய நிலைமை போன்ற விளையாட்டு செய்திகள் ஏறத்தாழ எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளன.
இப்போதெல்லாம் செய்தித்தாள்களின் விற்பனையினை செய்திகளின் நம்பகத்தன்மையை விட அவை எவ்வாறு பேக்கேஜ் செய்யப்படுகின்றன என்பதே தீர்மானிக்கிறது என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.அங்கிங்கெனாதபடி இந்தக் கூற்று எல்லா இடங்களுக்கும் பொருந்துகிறது.
17 June 2007
| [+/-] |
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும் |
மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்.
"குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது.
"ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தந்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற மேடத்தினது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.அது சரி.. ஒரு நியூட்ரீஷியனிடம் வேறு என்னவிதமான சம்பாஷணை செய்ய முடியும்.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையைக் கவனமாய்த் தவிர்த்தேன்.
"என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?ஹூம்...வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது......???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"அப்பாடா...நல்ல வேளை, வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
| [+/-] |
மீண்டும்... |
வீட்டில் நடந்த ஒரு மகிழ்வு தரும் நிகழ்வு,வெளியூர்ப் பிரயாணம் என்று பம்பரமாய்ச் சுழன்றதில் மாதங்கள் போனதே தெரியவில்லை.
கோடைகாலம் முடிந்த நிலையில் தமிழகத்தில், முதல் மழைக்காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.புதிதாய்ப் பள்ளி,கல்லூரிகளில் சேர்ந்திருக்கும்/சேரவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
கடந்த இரண்டு மாதங்களாக சுதந்திரக் காற்றை அனுபவித்து வந்த சிறார் பட்டாளம்,புத்தக மூட்டைகளைச் சுமந்த நிலையில் மீண்டும் கைதிகளாய்.இது எப்போது மாறும் என்று தெரியவில்லை??
தென்மேற்குப் பருவக்காற்று தரவிருக்கும் முதல் துளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் மக்களது எதிர்பார்ப்பை,இயற்கை நிறைவேற்றட்டும் என்று பிரார்த்திப்போம்.எழுத நிறைய விஷயங்களும்,நேரமும் இருக்கிறது என்பதால் இனிக் கிறுக்கித் தள்ளப்போகிறேன்.
பொறுத்தருள்க...
30 January 2007
| [+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #5 |
1)கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா??
2)காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை
3)மங்கையின் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழிமறந்தே வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி
4)நீ என்பது நீ மட்டுமல்ல
மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும்
5)தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
6)குயிலிசை போதுமே;அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே;அதன் உருவமும் தேவையா?
7)உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
8)நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீ என் வாசலைத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
9)மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
"வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க" என்றவர் பாடுகின்றார்
10)மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே...
19 January 2007
| [+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #4 (Reloaded) |
1)நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர் கள் ஊறும் வண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா...
2)கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்
3)கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ....
4)காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே....
5)சென்ற இடம் காணேன்;சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
6)காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட, அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
7)ஆம்பளையே சேராம பிள்ளை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்கே குடும்பம் நடத்துது
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
8)நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் திருவளர்செல்வன் சிவராமனுக்கும்,திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம்சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
9)பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பாடும் பறவைகள் ஆனோம்
பசியெடுத்தால் இசையை உண்டு திசைகள் தேடிப்போவோம்
ஒரு தெய்வம் இங்கே வந்து உறவைச் சொல்லு துணையாச்சு
10)தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.
12 January 2007
11 January 2007
| [+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #3 |
1)அடி மானே.....
கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்
ஒரு நூலு அறுந்தாலும் உருண்டோடுமே...
2)கண்ணுக்குள்ளே மின்னும் மையி
உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
3)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு
4)பருவக்குயில் தவிக்கிறதே...
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம்வயது தடுக்கிறதே....
5)ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே
அதில் வீணாக விழாதே
நீ விழாதே....
6)சன்மார்க்கங்களும் சப்ததீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே
7)வாங்கி வந்த மல்லிகைப்பூ
வாசமின்னும் போகலியே
நட்டுவச்ச பந்தக்காலும்
பள்ளமின்னும் மூடலியே
8) புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு
9)ஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பா பூத்தாலும்..
வாசமுள்ள பிச்சியெனக்கு வாய்க்காது எக்காலும்...
10) ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல...
ஓடும் அது ஓடும் ஒரு நிலையா நில்லாம...
29 December 2006
| [+/-] |
Happy B'day Dear(peer) Gilli.... |
சர் ஐசக் நியூட்டன்,மா சே துங்,எல்விஸ் ப்ரெஸ்லி,அடல் பிஹாரி வாஜ்பேயி,மெல் கிப்ஸன்,கில்லி என்ற இந்த சங்கிலித்தொடரில் உள்ளவர்களை இணைக்கும் ஒரு பொதுவான விஷயம் என்ன தெரியுமா?
இவர்கள் அத்தனை பேரது ராசியும் கேப்ரிகார்ன் என்பது தான்.
சாதித்தே தீர வேண்டும் என்னும் வெறியுணர்வு கொண்டவர்கள்;புதுமை விரும்பிகள்;நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள்;ஒரு தினுசானவர்கள்; ப்ராக்டிக்கலானவர்கள் ; பொறுமைத் திலகங்கள்;அதே சமயத்தில் ரவுசானவர்கள் என்று ஒரு கலவையான,சுவாரசியமான குணாதிசியங்கள் கொண்டவர்கள் இந்தக் கேப்ரீக்கள்.கில்லி பூவுலகுக்கு வந்த இந்த ஒரு ஆண்டில் இதில் பெரும்பாலானவற்றைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.அப்புறம் இதே கேப்ரீக்களின் பட்டியலில் என்னைப் போன்ற விதிவிலக்குகளும் இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
மாதாந்திர மென்பொருள் வெளியீடு முடிவடைந்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த ஒரு மத்தியான வேளையில் இணையத்தைக் குடைந்த போது கண்ணுக்குத் தென்பட்டது தான் இந்த கில்லி.ஆரம்பத்தில் மற்றுமொரு வலைப்பதிவு திரட்டி தானே என்றதொரு கண்ணோட்டத்தில் இருந்த எனக்கு கில்லிக்கும் தமிழ்மணம் போன்ற தானியங்கி வலைப்பதிவு திரட்டிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள உதவியது "கில்லி ஏன்???" என்னும் இந்தக் கட்டுரை.
கில்லி வந்த பிறகு எனது பகுத்தறிவு பல்கிப்பெருகியது;ஏழாம் அறிவு கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது.தமிழை,தமிழர்களை அடுத்த நூற்றாண்டுப் பயணத்திற்குத் தயார்படுத்துவதில் கில்லியின் பங்கு அளப்பறியது.கில்லி இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.கில்லியைத் தான் எனது நெருப்புநரியின் ஹோம் பேஜாக வைத்துள்ளேன்.கில்லியை வாழ்த்த வயது,அனுபவம் இன்றி வணங்குகிறேன்.கில்லியின் நலனை வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் ஆயுஷ் விருத்தி ஹோமம் செய்யப்போகிறேன் போன்ற உண்மைகளை எல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி..சரி....விஷயத்திற்கு வருவோம்.கில்லியின் வாயிலாகப் படித்தவை ஏராளம் என்றாலும் எனது மனதுக்குப் பிடித்த கட்டுரைகளை இங்கே பட்டியலாக்கியிருக்கேன்.
1)வைகோ திமுகவில் இணைந்து விட்டால் கருத்துக்கள் என்ன விழும் என யோசிக்கிறார் முகமூடி. தமிழக அரசியல்கட்சிகளின் வரலாறைப் பொறுத்த மட்டிலும் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் முக்கியமான ஒன்று.இப்படிக் கூட நடந்துப்பாங்களா என்று எண்ண வைத்த பல கேலிக் கூத்தான நிகழ்வுகள் மார்ச்சு,ஏப்ரல் மாதங்களில் நடந்தது.என்றாலும்,தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் சகபதிவர் கைவண்ணத்தில் பிப்ரவரியில் வெளியான இந்த அரசியல் நையாண்டிக் கட்டுரை குலுங்கிக் குலுங்கி சிரிக்கவைத்தது.
2) அமிர் உல்லா கான் மற்றும் பிபேக் தெப்ராய் என்ற இரு பொருளாதார நிபுணர்களினால் வெளியிடப்பட்ட "பாலிவுட்டின் கண்களின் ஊடாக இந்தியப் பொருளாதார மாற்றம்" என்ற கட்டுரையின் சாரத்தைப் பற்றிய ஆங்கிலப் பதிவு.கில்லி சுட்டாமல் இருந்திருந்தால் இது போன்ற தளங்களை ஜென்மத்துக்கும் நான் பார்வையிடுவேனா என்பது சந்தேகமே
3)இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா. 1985ல் கல்கி இதழில் வெளியான இளையராஜாவின் பேட்டியிலிருந்து சில பத்திகளை எடுத்து கப்பி பய பதிந்திருந்தார்.பதிவும் அருமை.அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் நடந்த இளையராஜா பற்றிய கருத்து பரிமாற்றங்களும் அதைக் கப்பி பய கையாண்டவிதமும் அருமை.
4) பிரபல ஹிந்தி இயக்குனர் சுபாஷ் கய்யின் கனவுத் திட்டமான WWI பற்றிய பதிவு இது.ஷப்னா ஆஸ்மி,ஜாவேதா சாப்,கிங் கான்,ஏ.ஆர்.ஆர்.போன்ற பெருந்தலைகள் இந்த கல்விக்கூடத்திலே அகடமிக்கல் அட்வைசர்களா இருக்காங்களாம்.அப்புறமா அடுத்த வருசத்திற்கான விண்ணப்பங்கள் தந்திட்டு இருக்காங்க.பதிவிலேயே இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியும் இருக்குதுங்கோவ்...
டிபிக்கல் கில்லி டச்: 'கிஸ்னா' மாதிரி படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்றும் சொல்லித் தருகிறார்களா என்று கேட்கவேண்டும்.
5)மற்ற சமயங்களில் ஊர் ஊராய்ச் சுற்றினாலும் துர்கா பூஜைக்கு சொந்த ஊருக்குப் போன கொல்கத்தாவின் எளவரசர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு தான் இது.சிறந்த முறையில் அமைக்கப்படும் பந்தல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாய் என்.டீ.டீவியில் மொனுதீபா சொல்லிக்கொண்டிருந்ததாய் நினைவு.அருமையான புகைப்படங்கள்
6)பொறுத்தது போதும் மனோகரா, சிக்சர் அடி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.டெஸ்ட் தொடரைப் பறி கொடுத்த நிலையில் ஒரு நாள் பந்தயங்களில் விளையாடச் சென்றது.ஒரு குழுவாக சிறப்பன முறையில் ஆடி அந்த ஒருநாள் தொடரினையும் வென்றது.அப்போது எழுதப்பட்ட இந்தப் பதிவினை எப்போது படித்தாலும் குபீரெனச் சிரிப்பு வரும்.$செல்வன் இந்த வருடம் புதியதாய் தமிழில் வலை பதிக்க வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.நையாண்டி,சமூகம்,அரசியல்,சமயம் என்னும் பல்வேறு களங்களில் திறம்பட பல பதிவுகள் தந்தவர்;தந்து கொண்டிருப்பவர்.அவரது ஆரம்பகாலப் பதிவுகளில் மறக்க முடியாத ஒன்று இது.அப்புறம் கில்லியில் பதிவு பற்றிக் குறிப்பிடும் போது,சூப்பர் ஸ்டார் பற்றிய விஷயத்தை ஹைலைட்டாக்கியது பிரகாசரின் திருவிளையாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
7)"நான் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருக்கேன்.என்னைப் போய் எலிமெண்டரி ஸ்கூல் பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கச் சொல்லாதே" என்று அம்மாவுடன் சண்டை போட்ட கல்லூரி விடுமுறை நாட்கள் நினைவுக்கு வருகின்றன.பொறியியல் படிப்பவர்களுக்குக் கொம்புகள் இரண்டு முளைக்கும்,பொட்டி தட்டும் வேலை மட்டுமே அவர்கள் செய்வார்கள் என்று தீவிரமாய் எண்ணிய நாட்கள் அவை.ஒரு இரண்டாம் நிலைக் கல்லூரியில் படித்த என் போன்றவர்களே இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் போது, ப்ரீமியர் கல்வி நிறுவனங்களில் படித்த இருவரைப் பற்றி கில்லி வாயிலாகக் கேள்விப்பட்டது மறக்க முடியாத ஒரு விஷயம். அதிகம் பயணப்படாத பாதையினைத் தேர்ந்தெடுக்க மனவுறுதி,தன்னம்பிக்கை தேவை.அப்படிப் பட்ட இருவரைப் பற்றிய கில்லியின் சுட்டி தான் மேலே தரப்பட்டுள்ளது.
8)இது "நமக்கு நாமே" திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று
எனது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது;மனதிற்கு நெருக்கமானது.உலக அம்மாக்கள் எல்லாம் ஒரே ரகம் என்பதை பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் நிரூபணம் செய்தன.இதுவரை படிக்காமல் இருந்தால் படித்துத் தான் பாருங்களேன்
9)என்ன தான் மொட்டையைத் தாண்டி வெளியே வரவில்லை என்றாலும்,"வாத்யார்" இளவஞ்சியின் எழுத்து நடைக்காக ரசித்த பதிவு இது.அய்யா இப்போது ஹிபர்னேஷன் மோடில் இருக்கிறாராம்.
10) எந்த நேரத்துக்குப் போனாலும் சுடச்சுட இட்டிலி கிடைக்கும் மருதை மாநகரத்தின் ஸ்பெஷல் உணவு ஜிகர்தண்டா மட்டுமல்ல இந்த பீமபுஷ்டி அல்வாவும் தான் என்கிறார் கட்டியக்காரர்.பாதம் அல்வா,கோதுமை அல்வா,பால் அல்வா,மஸ்கோத் அல்வா என்று வகைவகையாகச் சாப்பிட்டிருக்கும் எனக்கு இப்படியும் ஒரு அல்வா இருக்கும் சங்கதி கில்லி மூலமே தெரிய வந்தது.இந்த மாதிரி வழக்கொழிந்த போன உணவு வகைகளை அந்தந்த வட்டாரத்து மக்கள் செய்முறையோடு எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்??
11)மாற்றமே நிரந்திரமாகி விட்ட உலகில், இதோ வரேன் என்று சொல்லி விட்டுப் போன சௌமியா திரும்ப வரவேயில்லை.ஆதிகாலத்து வலைப்பதிவரான சௌமியாவிற்கு கில்லியின் அஞ்சலி..
12) எனக்கும் கடவுளுக்கும் இருக்கும் தூரம் அறுபத்தெட்டு ஒளி ஆண்டு என்பதைத் தெரியப்படுத்திய பதிவு இது. "1976 வருஷம் பிப்ரவரி இரண்டாவது வாரத்து குமுதத்துல ப்ரியா தொடர் பதினேழாவது அத்தியாயம் இரண்டாம் பக்கம் லெ*ப்ட் சைடு பாட்டத்துல பிரிண்ட் ஆயிருக்கும். போதுமா?! " என்று பின்னூட்டத்தில் ராம்கி பிளிறியது மறக்கக் கூடிய ஒன்றா??
நிற்க....இன்னும் பல பதிவுகளுக்கு இதயத்தில் இடம் அளித்துள்ளேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ??
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கில்லி மென்மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.
| [+/-] |
என்ன பாடல் ? என்ன படம் ? |
1)விழிகள் இரண்டையும் விளக்காய் மாற்றி
ஊமை விழிக்கொரு ஒளியைத் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள் தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்
2)அந்த பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
3)தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுபாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்?
4)பாடும் பறவைக் கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதைப் பாருங்கள்
5)பூமலர் தூவும் பூமரம் யாவும்
போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
6)பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும்
பொட்டு வைத்த குலமகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும்
7)முத்துநகை போலே சுற்றிவரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம் உள்ளவரை நானாக...
8)அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழி காட்டவா
9)இன்னும் கொஞ்சம் நீளவேண்டும் இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி
10)கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன..
28 December 2006
| [+/-] |
கில்லியை மேய்வதில் பிரச்சினையா?? |
உங்கள் அலுவலகத்தில் இருந்து கில்லியினை மேய முடியவில்லையா???
வீட்டில் இருந்து கில்லி விளையாடுவதில் தடையா???
வாங்க..வாங்க..நீங்களும் எலைட் லிஸ்டில சேர்ந்துட்டீங்க போல.
கூகிளாண்டவர் துணையால கண்டுபுட்ச்ச உரலைக் கீழே தந்திருக்கேன்.முயற்சி செஞ்சு பாருங்கோ...
http://www.google.com/gwt/n?u=gilli.in
மேலும் சில வொர்க் அரௌண்டுகள் கீழே உள்ள உரலில்:
http://labnol.blogspot.com/2005/12/how-to-access-blocked-websites.html
18 December 2006
| [+/-] |
என்ன பாட்டு? என்ன படம்? |
என்ன பாட்டு? என்ன படம்?
1)நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உன்னையே நினைச்சு உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை..
2)பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ணமுகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
3)கடற்கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
4)கடலொன்று நடுவிலே இல்லையென்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்
தமிழனர் தமிழர் தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா???
5)எண்ணம் என்னும் ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
6)தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
7)மழையும் வெயிலும் என்ன
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாணும் அழகிலாடும் கண்கள்
8)பள்ளி சென்ற காலப்பாதைகளே..
பாலங்கள் மாடங்கள் ஆஹா...
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
9)தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
10)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...



