1)ஏலா.. முத்தம்மா உம்மனசு எங்கிட்டு
எங்கிட்டதான் சொல்லுடி அம்மா
2)ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கைய்யில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கின்று
3)நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா
நிம்மதி இருக்காது அய்யா நிம்மதி இருக்காது
4)வான் இங்கே..நீலம் அங்கே...
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ??
5)காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
6)நீ உண்டு உண்டு என்றபோதும்
நீ இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா..
7)இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோகநாத ராகம்
இந்த ஏழை பாடும் வேதம்
8)தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கில்லையோ...
அன்னைத் தமிழுக்கு பிழை நேர்ந்தால் உனக்கில்லையோ...
9)ஒருவன் இதயம் உறங்கும் நிலையில்
அறியாக் குழந்தை நீ வாழ்க...
10)நான் மூணு மெத்தை மாடி கட்டி
மாடி மேல உன்னை வச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ...
24 June 2007
| [+/-] |
என்ன படம்? என்ன பாடல்? #6 |
| [+/-] |
ஞாயிறு செய்திகள் |
ஞாயிற்றுக்கிழமையில் எந்த ஊரில் இருந்தாலும் செய்தித் தாள் வாசிக்காமல் எனக்கு சோறு இறங்காது.எங்கள் ஏரியாவில் சில கழுதைகளின் ஜீவனம்,எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாங்கும் செய்தித்தாள்களை நம்பியே ஓடிக்கொண்டிருக்கிறது என்று அம்மா சொல்வது உண்மையோ..என்னவோ??.தினமணி,தினமலர்,தினகரன்,இந்து,இண்டியன் எக்ஸ்பிரஸ்,விஜய் டைம்ஸ்,டெக்கான் ஹெரால்ட் என்று சங்கிலித்தொடர் போலே நீளும் எங்களது ஞாயிற்றுக்கிழமைகளின் செய்தித்தாள் பட்டியல்.
மற்றநாட்களில் மருந்துக்கும் தொட்டுப்பார்க்காத இண்டியன் எக்ஸ்பிரசை உச்சி முதல் உள்ளங்கால் வரை புரட்டுவது ஞாயிற்றுக்கிழமையில் தான்.பரத்வாஜ் ரங்கனின் சினிமா விமர்சனம்,எல்.சுரேஷின் முக்கிய கட்டுரை,வாணி கணபதியின் டீன் அட்வைசுகள்,படிக்க சுவாரசியமாக இருக்கும் மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்று ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொல்லி வைத்தார்கள்.இங்கே வந்தபிறகும் இந்த ஞாயிறு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் போகவில்லை.இந்தப் பத்திரிக்கை வாங்கினால் இந்த டிவிடி இலவசம்;இது வாங்கினால் இந்தப் புத்தகம் இலவசம்;இது வாங்கினால் இந்த வாலெட் இலவசம் என்று மூன்று பவுண்டுகளுக்கு செய்தித் தாள்களையும்,10 பவுண்டுகள் மதிப்புள்ள இலவச இணைப்புகளையும் வாங்கிய பின்னர் ஏற்படும் பரவச நிலை இருக்கிறதே..ஹூம்..அதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது ஓய்...
அப்படி இன்றைக்கு வாங்கிய செய்தித் தாள்களில் இருந்து சில சுவாரசியமான செய்திகளைக் கீழே தந்துள்ளேன்.
வரும் புதன்கிழமையன்று பதவிலிருந்து செல்லவிருக்கும் டோனி பிளேர் அடுத்து என்ன செய்யப்போகிறார்,என்ன செய்யலாம் என்று ஆள் ஆளுக்கு கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.அதே போல் அன்று பதவியேற்கவிருக்கும் கார்டன் பிரௌனின் அமைச்சரவையில் இளம்ரத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.இப்போதுள்ள 23 பேர் அமைச்சரவையில் இருந்து குறைந்த பட்சம் 9 பேராவது நீக்கப்படுவது உறுதி என்ற செய்தி அனைத்து செய்தித்தாள்களிலும் முதல்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பதின்ம வயதினரிடையே கிறித்துவ மதக்கொள்கையைப் பரப்பும் வகையில் "Mixing it up with the Simpsons"என்ற ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளதாம்.இது மிகவும் பிரபலமான சிம்ஸன்ஸ் என்னும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் மூலம் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியாகும்.பல பெருந்தலைகள் இந்த முயற்சியினை வரவேற்று பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி எந்த ஒரு செய்தித்தாளிலும் செய்தி வரவில்லை.மாறாக 2010ல் புதுதில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு அங்குள்ள பிச்சைக்காரர்களை சிறையில் அடைக்கும் திட்டம் பற்றி ஒரு பெரிய கட்டுரையே வந்துள்ளது;ஒரு பிச்சைக்காரரின் முழு வண்ணப்படத்துடன்.
நாளை துவங்கவிருக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்,அடுத்த மாதம் இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியின் தற்போதைய நிலைமை போன்ற விளையாட்டு செய்திகள் ஏறத்தாழ எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ளன.
இப்போதெல்லாம் செய்தித்தாள்களின் விற்பனையினை செய்திகளின் நம்பகத்தன்மையை விட அவை எவ்வாறு பேக்கேஜ் செய்யப்படுகின்றன என்பதே தீர்மானிக்கிறது என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.அங்கிங்கெனாதபடி இந்தக் கூற்று எல்லா இடங்களுக்கும் பொருந்துகிறது.
17 June 2007
| [+/-] |
கொட்டும் மழையும் தொட்டுக்க சூடான ஒரு காதல் கதையும் |
மழை வரும் போது நிழலுக்காக டீக் கடையைத் தவிர்த்து எங்கே வேண்டுமானாலும் ஒதுங்கலாம்.அதுவும் சூடான பருப்புவடை,போண்டா போடும் கடைகளை அறவே தவிர்க்க வேண்டும்.பாடி மாஸ் இன்டெக்ஸ்,ஒபேசிட்டி என்று ஜல்லியடிப்பவர்கள் மழைக்குப் பயந்து எங்கேயும் ஒதுங்கக் கூடாது.திரு,திருவென முழிக்காமல் கீழே தொடரவும்.
"அடச்சே,என்ன மழைப்பா??சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்களேன்"என்ற அந்த சிவப்புச்சட்டை ஆசாமியின் குரல் கேட்டு தான் நான் இந்தப் பூவுலகிற்கு மறுபடியும் திரும்பினேன்.
"குடை எடுத்திட்டு வரும்போதெல்லாம் மழை பெய்யறதேயில்லை.இன்னைக்கு மறந்து குடைய வெச்சுட்டு வந்தனோ போச்சு மழ கொட்டிட்டு இருக்கு" என்று அவர் பாட்டுக்கு மழைக்கு தன்னுடன் ஒதுங்கிய சக மனிதர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்.நாங்கள் அனைவரும் ஒதுங்கிய இடம் "அஜீத் டீ-இஷ்டால்".அவருக்கு இடம் தந்துவிட்டு கடைக்குள் இருந்து வந்த வடை சுடும் வாசனையின் உபயத்தால் சொர்க்கலோகத்திற்கு மறுபடியும் பயணிக்க ஆரம்பித்தேன்.
வெளியே மழை பாட்டுக்கு வெளுத்துக் கொட்டிக்கொண்டிருந்தது.
"ஹூம்.ஆஹா....அட வடையில் இஞ்சி,கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டிருக்காங்க போலிருக்கு.இது வெங்காய பக்கொடா பொரிச்செடுக்கும் சத்தம் தான்.அய்யோ..இந்த போண்டா எல்லாம் குண்டு,குண்டா பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு" என்று எனது ஐம்புலன்கள் தகவல்களைச் சேகரித்து தந்த வண்ணம் இருந்தன.
"முழுவதும் வறுக்கப்பட்ட பொருட்களை நீ சுத்தமாத் தவிர்க்கணும்.குறிப்ப உனக்குப் பிடிச்ச நொறுக்குத் தீனிகளான வடை,சிப்ஸ்,பக்கோடா.அப்புறமா,நார்ச்சத்து இருக்கிற பொருளா நிறைய சாப்பிடணும்.என்ன தான் உன்னோட பாடி மாஸ் இன்டெக்ஸ் படி கரெக்டான வெயிட்னாலும்,ஜெனடிக்கலா உங்க வீட்ல அம்மா சைட் எல்லாருமே ஒபீஸ் தான்.ஹல்லோ நான் உன் கிட்ட தான் சொல்லீட்டு இருக்கேன்"என்ற மேடத்தினது அறிவுரை ஒரு மின்னலாய் வெட்டிச் சென்றது.அவளைச் சந்தித்தது முதல் என்னால் நிம்மதியா சாப்பிட முடியலை.அது சரி.. ஒரு நியூட்ரீஷியனிடம் வேறு என்னவிதமான சம்பாஷணை செய்ய முடியும்.
"சார்,ஒரு வடை எடுத்துக்கோங்க"என்ற சிவப்புச் சட்டை ஆசாமியின் தாராள மனப்பான்மைக்கு நன்றி சொல்லி வடையைக் கவனமாய்த் தவிர்த்தேன்.
"என்ன ஆயில் உபயோகிக்கறாங்களோ?எப்பத்த மாவோ?வடை போடற ஆசாமி சுத்த பத்தமாத் தான் சுடுவானா?இந்தப் பாத்திரங்களைப் பார்த்தா இதெல்லாம் குளிச்சே மாமாங்கமாயிருக்கும் போல இருக்கே?ஹூம்...வாசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.ஆனா,மேடமோட வார்த்தைகளை மெமரியில ஏத்திக்கோ"என்றது எனது மனசாட்சி.பார்வையை மழையின் பக்கம் திருப்பினேன்.இன்னமும் சோவென ஊற்றிக்கொண்டிருந்தது.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியுது சார்.பொது இடத்தில வந்திட்டா நாமும் சோதியில ஐக்கியம் ஆயிடணும்.தவிர,இது நான் ரெகுலராச் சாப்பிடற கடை தான்.சுத்தம் பத்தி எல்லாம் கவலப்படாம ரெண்டு வடய உள்ள தள்ளுங்க.உங்க வயசுக்கு கல்லு,மண்ணு சாப்பிட்டாக் கூட செரிமானம் ஆயிடும்.தங்கம், அந்தச் சட்டினியைக் கொஞ்சம் இங்கே தள்ளு"என்று வடையினை வதம் செய்ய ஆரம்பித்தார் சிவப்புச்சட்டை ஆசாமி.
"அவர் சொல்றதிலும் நியாயம் இருக்கு.வடை போட்ற ஆள் கூட நல்ல துணி தான் போட்டிருக்கான்.முகத்தையும் ஷேவ் பண்ணியிருக்கான்.அவன அசப்பில பாத்தா அல்ட்டிமேட் இஷ்டார் மாதிரிக் கூட இருக்கான்."என்று மனதில் நினைத்துக் கொண்டே தட்டின் மேல் ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்த வடைகளின் மேலே பார்வையை மையப்படுத்தினேன்.
"உங்க ஃபேமிலியில ஹார்ட் டிசீசஸ் வந்து மண்டையப் போட்டவங்க கவுன்ட் இதுவரைக்கும் நாலு.இதுக்கு அவங்களோட உணவு முறைகளும் சரியா உடலை மெயின்டெயின் செய்யாததும் தான் காரணும்னு உனக்கு நல்லாவே தெரியும் தான.இவ்ளோ ஏன் உங்க ராஜியக்காவுக்கு கல்யாணம் தள்ளிப் போறதுக்கு முக்கியக் காரணம் ஷீ இஸ் fat.அதனால நீ வந்து....."ஒரு மின்னல் இடியாய் முழங்கியது நினைவுக்கு வந்து தொலைத்தது.
"வடை சுடுறது மாதிரி அதை அரைக்கிறதும் ஒரு கலை தான்.முழுசா அரைபடாத பருப்பு பல்லுல பட்டுக் கடிபடும் போது இருக்கிற சுகம் இருக்கே.அட.அட.அதுவும் இந்தப் பருப்பு வடை கூடச் சின்ன வெங்காயச் சட்னி தொட்டுட்டு சாப்டா...ஆஹா...இத விட பெங்களூர் பக்கம் மத்தூர் வடைன்னு ஒண்ணு செய்வான் பாரு.அந்த வடையோட டேஸ்டுக்கு நம்ம சொத்தே எழுதிக் கொடுத்தாலும் தகும்"எனது ஆர்வமின்மையை உணர்ந்த சிவப்புச்சட்டை தற்போது பக்கத்திலிருந்த மற்றுமொரு வடைப் பிரியரிடம் உரையாடக் கொண்டிருந்தார்.வெளியே மழையின் வேகம் சற்றுத் தணிந்திருந்தது.
"சே.பாவம் இந்தக் கடைக்காரர்.மழை வந்ததனால சனங்க யாரும் வூட்டை வுட்டு வெளியே வரவே இல்லை.அதனால சரியாக் கூட்டமும் இல்லை;வியாபாரமும் இல்லை.இப்படி மழைக்கு ஒதுங்கினவங்களை நம்பித்தான் இவரோட இன்னத்த பொழப்பே இருக்கு.சுத்தம்,சுகாதாரம்,பி.எம்.ஐ,ஒபேசிட்டி,இன்டர்சிட்டின்னு கண்டதையும் போட்டுக் குழப்பாம ரெண்டு வடைய வாங்கி உள்ள தள்ளுவியா.."என்றது மனசின் குரல்.
"சரி ரெண்டு வடையச் சாப்பிட்டுடு நாளக் காலையில ஜாக்கிங்க்ல ஒரு ரெண்டு ரவுண்டு கூட்டிக்குவோம்.ஆனால்,இந்த சிவப்புச் சட்டைக்கு முன்னால வடை வாங்கிச் சாப்பிடரது நல்லா இருக்காது"என எண்ணிக்கொண்டே மௌனமாய் இருந்தேன்.மெல்லத் தூறலும் நிற்க ஆரம்பித்தது.சிவப்புச்சட்டையும் தனது சகாக்களுடன் கிளம்பியது.
"கிளம்பீட்டாங்கய்யா...கிளம்பீட்டாங்க"என்று மனசில் கூவிக்கொண்டே "ரெண்டு பருப்பு வடை,நிறையச் சட்னியோட குடுங்க"என்றேன்.
"வடையெல்லாம் ஆகிப் போச்சு."
"என்னது......???"
"வடையெல்லாம் தீர்ந்து போச்சு சார்.நல்ல மழக்காலம் பாருங்க.எல்லாம் சூடு ஆறரதுக்கு முந்தியே வித்துப் போகுது.வேற ஏதாவது வேணுமின்னாக் கேளுங்க"என்றும் முழக்கமிட்டவாரே பால் பாக்கெட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் கடைக்காரர்.
"அப்பாடா...நல்ல வேளை, வடை தீர்ந்திடுச்சு.எந்த எண்ணைல சுட்டதோ??எந்த மாவில சுட்டதோ?சன்டே-அன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து ஓடரதே பெரிசு.இதில ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா??தப்பிச்சேன்"என்று எச்சிலை விழுங்கியவாறே வடைச்சட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.
ஆகவே அன்பர்களே,மறுபடியும் இந்தக் கட்டுரையின் முதல் பாரவைப் படிக்கவும்.
| [+/-] |
மீண்டும்... |
வீட்டில் நடந்த ஒரு மகிழ்வு தரும் நிகழ்வு,வெளியூர்ப் பிரயாணம் என்று பம்பரமாய்ச் சுழன்றதில் மாதங்கள் போனதே தெரியவில்லை.
கோடைகாலம் முடிந்த நிலையில் தமிழகத்தில், முதல் மழைக்காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறது.புதிதாய்ப் பள்ளி,கல்லூரிகளில் சேர்ந்திருக்கும்/சேரவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
கடந்த இரண்டு மாதங்களாக சுதந்திரக் காற்றை அனுபவித்து வந்த சிறார் பட்டாளம்,புத்தக மூட்டைகளைச் சுமந்த நிலையில் மீண்டும் கைதிகளாய்.இது எப்போது மாறும் என்று தெரியவில்லை??
தென்மேற்குப் பருவக்காற்று தரவிருக்கும் முதல் துளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் மக்களது எதிர்பார்ப்பை,இயற்கை நிறைவேற்றட்டும் என்று பிரார்த்திப்போம்.எழுத நிறைய விஷயங்களும்,நேரமும் இருக்கிறது என்பதால் இனிக் கிறுக்கித் தள்ளப்போகிறேன்.
பொறுத்தருள்க...
30 January 2007
| [+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #5 |
1)கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா??
2)காதல் வழிச்சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை
3)மங்கையின் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழிமறந்தே வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி
4)நீ என்பது நீ மட்டுமல்ல
மூளையின் மூலையில் ஓர் குரல் கேட்கும்
5)தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
6)குயிலிசை போதுமே;அட குயில் முகம் தேவையா?
உணர்வுகள் போதுமே;அதன் உருவமும் தேவையா?
7)உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
8)நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீ என் வாசலைத் தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
9)மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
"வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க" என்றவர் பாடுகின்றார்
10)மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே...
19 January 2007
| [+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #4 (Reloaded) |
1)நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர் கள் ஊறும் வண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா...
2)கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளித் தாவும் மான் குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்
3)கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் தேடும்
மலரே நீ பெண்ணல்லவோ....
4)காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே....
5)சென்ற இடம் காணேன்;சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
6)காதல் என்பது மழையானால் அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் தாலாட்ட, அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
7)ஆம்பளையே சேராம பிள்ளை பொறக்குது
பொம்பளைங்க சேர்ந்து இங்கே குடும்பம் நடத்துது
பொய்யும் சத்தியம் செய்யும்
இந்த பூமி எப்படி உய்யும்
8)நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் திருவளர்செல்வன் சிவராமனுக்கும்,திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம்சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.
9)பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பாடும் பறவைகள் ஆனோம்
பசியெடுத்தால் இசையை உண்டு திசைகள் தேடிப்போவோம்
ஒரு தெய்வம் இங்கே வந்து உறவைச் சொல்லு துணையாச்சு
10)தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது.
12 January 2007
11 January 2007
| [+/-] |
என்ன படம் ? என்ன பாடல் ? #3 |
1)அடி மானே.....
கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சுக்கணும்
ஒரு நூலு அறுந்தாலும் உருண்டோடுமே...
2)கண்ணுக்குள்ளே மின்னும் மையி
உள்ளுக்குள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
3)வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேய்ங்குழல் பாடுது வீணையொடு
4)பருவக்குயில் தவிக்கிறதே...
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம்வயது தடுக்கிறதே....
5)ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே
அதில் வீணாக விழாதே
நீ விழாதே....
6)சன்மார்க்கங்களும் சப்ததீர்த்தங்களும்
அஷ்டயோகங்களும் நவயாகங்களும்
தொழும் பூங்கழலே மலைமாமகளே
7)வாங்கி வந்த மல்லிகைப்பூ
வாசமின்னும் போகலியே
நட்டுவச்ச பந்தக்காலும்
பள்ளமின்னும் மூடலியே
8) புதுவெள்ளம் சேரும்போது வழியென்ன பாதை என்ன?
புதுக்காத்து வீசுறபோது திசை என்ன தேசம் என்ன?
மனசுக்கு தாள் போட்டு
நீ போ மயிலே, வேணாம் வெளையாட்டு
9)ஆயிரம் பிச்சிப்பூவும் அரும்பரும்பா பூத்தாலும்..
வாசமுள்ள பிச்சியெனக்கு வாய்க்காது எக்காலும்...
10) ஓடை நீரோடை, இந்த உலகம் அது போல...
ஓடும் அது ஓடும் ஒரு நிலையா நில்லாம...
29 December 2006
| [+/-] |
Happy B'day Dear(peer) Gilli.... |
சர் ஐசக் நியூட்டன்,மா சே துங்,எல்விஸ் ப்ரெஸ்லி,அடல் பிஹாரி வாஜ்பேயி,மெல் கிப்ஸன்,கில்லி என்ற இந்த சங்கிலித்தொடரில் உள்ளவர்களை இணைக்கும் ஒரு பொதுவான விஷயம் என்ன தெரியுமா?
இவர்கள் அத்தனை பேரது ராசியும் கேப்ரிகார்ன் என்பது தான்.
சாதித்தே தீர வேண்டும் என்னும் வெறியுணர்வு கொண்டவர்கள்;புதுமை விரும்பிகள்;நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள்;ஒரு தினுசானவர்கள்; ப்ராக்டிக்கலானவர்கள் ; பொறுமைத் திலகங்கள்;அதே சமயத்தில் ரவுசானவர்கள் என்று ஒரு கலவையான,சுவாரசியமான குணாதிசியங்கள் கொண்டவர்கள் இந்தக் கேப்ரீக்கள்.கில்லி பூவுலகுக்கு வந்த இந்த ஒரு ஆண்டில் இதில் பெரும்பாலானவற்றைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது.அப்புறம் இதே கேப்ரீக்களின் பட்டியலில் என்னைப் போன்ற விதிவிலக்குகளும் இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
மாதாந்திர மென்பொருள் வெளியீடு முடிவடைந்து ஈ ஓட்டிக்கொண்டிருந்த ஒரு மத்தியான வேளையில் இணையத்தைக் குடைந்த போது கண்ணுக்குத் தென்பட்டது தான் இந்த கில்லி.ஆரம்பத்தில் மற்றுமொரு வலைப்பதிவு திரட்டி தானே என்றதொரு கண்ணோட்டத்தில் இருந்த எனக்கு கில்லிக்கும் தமிழ்மணம் போன்ற தானியங்கி வலைப்பதிவு திரட்டிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள உதவியது "கில்லி ஏன்???" என்னும் இந்தக் கட்டுரை.
கில்லி வந்த பிறகு எனது பகுத்தறிவு பல்கிப்பெருகியது;ஏழாம் அறிவு கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது.தமிழை,தமிழர்களை அடுத்த நூற்றாண்டுப் பயணத்திற்குத் தயார்படுத்துவதில் கில்லியின் பங்கு அளப்பறியது.கில்லி இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.கில்லியைத் தான் எனது நெருப்புநரியின் ஹோம் பேஜாக வைத்துள்ளேன்.கில்லியை வாழ்த்த வயது,அனுபவம் இன்றி வணங்குகிறேன்.கில்லியின் நலனை வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் ஆயுஷ் விருத்தி ஹோமம் செய்யப்போகிறேன் போன்ற உண்மைகளை எல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி..சரி....விஷயத்திற்கு வருவோம்.கில்லியின் வாயிலாகப் படித்தவை ஏராளம் என்றாலும் எனது மனதுக்குப் பிடித்த கட்டுரைகளை இங்கே பட்டியலாக்கியிருக்கேன்.
1)வைகோ திமுகவில் இணைந்து விட்டால் கருத்துக்கள் என்ன விழும் என யோசிக்கிறார் முகமூடி. தமிழக அரசியல்கட்சிகளின் வரலாறைப் பொறுத்த மட்டிலும் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் முக்கியமான ஒன்று.இப்படிக் கூட நடந்துப்பாங்களா என்று எண்ண வைத்த பல கேலிக் கூத்தான நிகழ்வுகள் மார்ச்சு,ஏப்ரல் மாதங்களில் நடந்தது.என்றாலும்,தமிழக அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் சகபதிவர் கைவண்ணத்தில் பிப்ரவரியில் வெளியான இந்த அரசியல் நையாண்டிக் கட்டுரை குலுங்கிக் குலுங்கி சிரிக்கவைத்தது.
2) அமிர் உல்லா கான் மற்றும் பிபேக் தெப்ராய் என்ற இரு பொருளாதார நிபுணர்களினால் வெளியிடப்பட்ட "பாலிவுட்டின் கண்களின் ஊடாக இந்தியப் பொருளாதார மாற்றம்" என்ற கட்டுரையின் சாரத்தைப் பற்றிய ஆங்கிலப் பதிவு.கில்லி சுட்டாமல் இருந்திருந்தால் இது போன்ற தளங்களை ஜென்மத்துக்கும் நான் பார்வையிடுவேனா என்பது சந்தேகமே
3)இளையராஜாவை வியக்க வைக்கும் இளையராஜா. 1985ல் கல்கி இதழில் வெளியான இளையராஜாவின் பேட்டியிலிருந்து சில பத்திகளை எடுத்து கப்பி பய பதிந்திருந்தார்.பதிவும் அருமை.அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் நடந்த இளையராஜா பற்றிய கருத்து பரிமாற்றங்களும் அதைக் கப்பி பய கையாண்டவிதமும் அருமை.
4) பிரபல ஹிந்தி இயக்குனர் சுபாஷ் கய்யின் கனவுத் திட்டமான WWI பற்றிய பதிவு இது.ஷப்னா ஆஸ்மி,ஜாவேதா சாப்,கிங் கான்,ஏ.ஆர்.ஆர்.போன்ற பெருந்தலைகள் இந்த கல்விக்கூடத்திலே அகடமிக்கல் அட்வைசர்களா இருக்காங்களாம்.அப்புறமா அடுத்த வருசத்திற்கான விண்ணப்பங்கள் தந்திட்டு இருக்காங்க.பதிவிலேயே இந்த நிறுவனத்தின் இணையதள முகவரியும் இருக்குதுங்கோவ்...
டிபிக்கல் கில்லி டச்: 'கிஸ்னா' மாதிரி படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்றும் சொல்லித் தருகிறார்களா என்று கேட்கவேண்டும்.
5)மற்ற சமயங்களில் ஊர் ஊராய்ச் சுற்றினாலும் துர்கா பூஜைக்கு சொந்த ஊருக்குப் போன கொல்கத்தாவின் எளவரசர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு தான் இது.சிறந்த முறையில் அமைக்கப்படும் பந்தல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாய் என்.டீ.டீவியில் மொனுதீபா சொல்லிக்கொண்டிருந்ததாய் நினைவு.அருமையான புகைப்படங்கள்
6)பொறுத்தது போதும் மனோகரா, சிக்சர் அடி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.டெஸ்ட் தொடரைப் பறி கொடுத்த நிலையில் ஒரு நாள் பந்தயங்களில் விளையாடச் சென்றது.ஒரு குழுவாக சிறப்பன முறையில் ஆடி அந்த ஒருநாள் தொடரினையும் வென்றது.அப்போது எழுதப்பட்ட இந்தப் பதிவினை எப்போது படித்தாலும் குபீரெனச் சிரிப்பு வரும்.$செல்வன் இந்த வருடம் புதியதாய் தமிழில் வலை பதிக்க வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.நையாண்டி,சமூகம்,அரசியல்,சமயம் என்னும் பல்வேறு களங்களில் திறம்பட பல பதிவுகள் தந்தவர்;தந்து கொண்டிருப்பவர்.அவரது ஆரம்பகாலப் பதிவுகளில் மறக்க முடியாத ஒன்று இது.அப்புறம் கில்லியில் பதிவு பற்றிக் குறிப்பிடும் போது,சூப்பர் ஸ்டார் பற்றிய விஷயத்தை ஹைலைட்டாக்கியது பிரகாசரின் திருவிளையாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
7)"நான் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருக்கேன்.என்னைப் போய் எலிமெண்டரி ஸ்கூல் பசங்களுக்கு ட்யூஷன் எடுக்கச் சொல்லாதே" என்று அம்மாவுடன் சண்டை போட்ட கல்லூரி விடுமுறை நாட்கள் நினைவுக்கு வருகின்றன.பொறியியல் படிப்பவர்களுக்குக் கொம்புகள் இரண்டு முளைக்கும்,பொட்டி தட்டும் வேலை மட்டுமே அவர்கள் செய்வார்கள் என்று தீவிரமாய் எண்ணிய நாட்கள் அவை.ஒரு இரண்டாம் நிலைக் கல்லூரியில் படித்த என் போன்றவர்களே இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் போது, ப்ரீமியர் கல்வி நிறுவனங்களில் படித்த இருவரைப் பற்றி கில்லி வாயிலாகக் கேள்விப்பட்டது மறக்க முடியாத ஒரு விஷயம். அதிகம் பயணப்படாத பாதையினைத் தேர்ந்தெடுக்க மனவுறுதி,தன்னம்பிக்கை தேவை.அப்படிப் பட்ட இருவரைப் பற்றிய கில்லியின் சுட்டி தான் மேலே தரப்பட்டுள்ளது.
8)இது "நமக்கு நாமே" திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று
எனது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது;மனதிற்கு நெருக்கமானது.உலக அம்மாக்கள் எல்லாம் ஒரே ரகம் என்பதை பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் நிரூபணம் செய்தன.இதுவரை படிக்காமல் இருந்தால் படித்துத் தான் பாருங்களேன்
9)என்ன தான் மொட்டையைத் தாண்டி வெளியே வரவில்லை என்றாலும்,"வாத்யார்" இளவஞ்சியின் எழுத்து நடைக்காக ரசித்த பதிவு இது.அய்யா இப்போது ஹிபர்னேஷன் மோடில் இருக்கிறாராம்.
10) எந்த நேரத்துக்குப் போனாலும் சுடச்சுட இட்டிலி கிடைக்கும் மருதை மாநகரத்தின் ஸ்பெஷல் உணவு ஜிகர்தண்டா மட்டுமல்ல இந்த பீமபுஷ்டி அல்வாவும் தான் என்கிறார் கட்டியக்காரர்.பாதம் அல்வா,கோதுமை அல்வா,பால் அல்வா,மஸ்கோத் அல்வா என்று வகைவகையாகச் சாப்பிட்டிருக்கும் எனக்கு இப்படியும் ஒரு அல்வா இருக்கும் சங்கதி கில்லி மூலமே தெரிய வந்தது.இந்த மாதிரி வழக்கொழிந்த போன உணவு வகைகளை அந்தந்த வட்டாரத்து மக்கள் செய்முறையோடு எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்??
11)மாற்றமே நிரந்திரமாகி விட்ட உலகில், இதோ வரேன் என்று சொல்லி விட்டுப் போன சௌமியா திரும்ப வரவேயில்லை.ஆதிகாலத்து வலைப்பதிவரான சௌமியாவிற்கு கில்லியின் அஞ்சலி..
12) எனக்கும் கடவுளுக்கும் இருக்கும் தூரம் அறுபத்தெட்டு ஒளி ஆண்டு என்பதைத் தெரியப்படுத்திய பதிவு இது. "1976 வருஷம் பிப்ரவரி இரண்டாவது வாரத்து குமுதத்துல ப்ரியா தொடர் பதினேழாவது அத்தியாயம் இரண்டாம் பக்கம் லெ*ப்ட் சைடு பாட்டத்துல பிரிண்ட் ஆயிருக்கும். போதுமா?! " என்று பின்னூட்டத்தில் ராம்கி பிளிறியது மறக்கக் கூடிய ஒன்றா??
நிற்க....இன்னும் பல பதிவுகளுக்கு இதயத்தில் இடம் அளித்துள்ளேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ??
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கில்லி மென்மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.
| [+/-] |
என்ன பாடல் ? என்ன படம் ? |
1)விழிகள் இரண்டையும் விளக்காய் மாற்றி
ஊமை விழிக்கொரு ஒளியைத் தாருங்கள்
கருணை உதவியும் இரண்டு கரங்கள் தான்
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்
2)அந்த பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
3)தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுபாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்?
4)பாடும் பறவைக் கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதைப் பாருங்கள்
5)பூமலர் தூவும் பூமரம் யாவும்
போதை கொண்டு பூமி தன்னைப் பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே
6)பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும்
பொட்டு வைத்த குலமகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும்
7)முத்துநகை போலே சுற்றிவரும் பெண்கள் முத்தமழை தேனாக
வந்தவரை லாபம் கொண்டவரை மோகம் உள்ளவரை நானாக...
8)அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழி காட்டவா
9)இன்னும் கொஞ்சம் நீளவேண்டும் இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி
10)கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன..
28 December 2006
| [+/-] |
கில்லியை மேய்வதில் பிரச்சினையா?? |
உங்கள் அலுவலகத்தில் இருந்து கில்லியினை மேய முடியவில்லையா???
வீட்டில் இருந்து கில்லி விளையாடுவதில் தடையா???
வாங்க..வாங்க..நீங்களும் எலைட் லிஸ்டில சேர்ந்துட்டீங்க போல.
கூகிளாண்டவர் துணையால கண்டுபுட்ச்ச உரலைக் கீழே தந்திருக்கேன்.முயற்சி செஞ்சு பாருங்கோ...
http://www.google.com/gwt/n?u=gilli.in
மேலும் சில வொர்க் அரௌண்டுகள் கீழே உள்ள உரலில்:
http://labnol.blogspot.com/2005/12/how-to-access-blocked-websites.html
18 December 2006
| [+/-] |
என்ன பாட்டு? என்ன படம்? |
என்ன பாட்டு? என்ன படம்?
1)நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
உன்னையே நினைச்சு உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை..
2)பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ணமுகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
3)கடற்கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
4)கடலொன்று நடுவிலே இல்லையென்று கொள்வினம்
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்று தான்
தமிழனர் தமிழர் தான்
புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா???
5)எண்ணம் என்னும் ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்க்கையிலே துணைவி
6)தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோகம்
7)மழையும் வெயிலும் என்ன
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாணும் அழகிலாடும் கண்கள்
8)பள்ளி சென்ற காலப்பாதைகளே..
பாலங்கள் மாடங்கள் ஆஹா...
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
9)தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
10)நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா?
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக்கொடி கட்டுங்கள்...
29 November 2006
| [+/-] |
Remembering N.S.K - ஸ்பெஷல் "ஓ"மப்பொடி |
தமிழ்த்திரையுலகின் மறக்கமுடியாத தலை பத்து நபர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த கலைவாணரது பிறந்த நாள் இன்று.இது பற்றி நினைவு கூர்ந்த தருமிக்கும்,பாலபாரதிக்கும் நன்றிகள்.
இவரது ஆரம்பகாலத்திரைப்படங்களைப் பற்றிய ஒரு கதம்பம் தான் இந்தப் பதிவு.
1935:- ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான "மேனகா" என்னும் திரைப்படம் தான் என்.எஸ்.கே நடிப்பில் வெளியான முதல் படம்.இதில் தீய குணம் கொண்ட சாமா ஐயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1936:- திரும்பவும் ராஜா சாண்டோவின் இயக்கத்தில் "சந்திரகாந்தா" என்ற திரைப்படத்தில் நடித்தார்.நயவஞ்சகச் செயலுக்குத் துணை போனதால் சிறிது லாபம் அடைந்து தனது பழைய நிலையை மறந்த நாவித முனியன் பாத்திரத்தில் கலக்கியிருந்தார்.
1936:- இந்த ஆண்டு வெளியான "சதி லீலாவதி" தான் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் என்றாலும் "மேனகா" முந்திக்கொண்டது.எல்லீஸ்.ஆர்.டங்கனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தான் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனுக்கும் முதல் படம்.
1937:- முதன்முதலில் மதுரம் அவர்களுடன் சேர்ந்து நடித்த படமான "வசந்தசேனா" வெளியானது.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின்போது தான் என்.எஸ்.கே மதுரத்தைச் சந்தித்தார்.இருவரும் ராஜா சாண்டோவின் தலைமையில் தம்பதிகளாக சேர்ந்து வாழ முற்பட்டனர்.
1937:- எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் "அம்பிகாபதி".
1938:- ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "தக்ஷயக்ஞம்".
1939:- ராஜா சாண்டோ இயக்கத்தில் "திருநீலகண்டர்",ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "மாயா மச்சீந்திரா",ராவ் இயக்கத்தில் "ரம்பையின் காதல்",ரகுநாத் இயக்கத்தில் "ஜோதி (அ) ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள்".
(தொடரும்)
16 November 2006
| [+/-] |
என்னுடைய ஐடியை ஹேக் செஞ்சிட்டாங்க. |
மாசம் ஒன்று என்ற கணக்கில் பதிவு போடும் என்னைப் போன்ற சோம்பேறிகளின் ப்ளாக்கர் ஐடியை ஹேக் செய்வதனால் யாருக்கு என்ன லாபம்?
ஒண்ணுமே புரியலை...ஏதாவது அயல்நாட்டு சதியான்னு தெரியலை?
ஆகவே மக்கா,உங்க பதிவுகளில் ஏதாவது ஏடாகூடமான பின்னூட்டம் என்னோட பெயரில இருந்தாத் தெரியப் படுத்துங்க.அதை இட்டது யார்னு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.
Inconvenience caused is highly regretted.
"இறைவா.எனது நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" - ஜக்குபாய்
19 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 3 |
1) பாரதியாரது பாடல்கள் முதன் முதலில் திரையில் ஒலித்தது எந்தப் படத்தில்?
2) "பல்லாண்டு வாழ்க" என்ற படத்தில் இடம் பெறும் "ஒன்றே குலம் என்று பாடுவோம்" பாடலுக்கு முன்னால் சில திருக்குறள்கள் இடம் பெற்றிருக்கும்.அவை எவை?
3) பட்டுக்கோட்டையார் இறுதியாக எழுதிய பாடல் எது?
4) கீழ்க்கண்ட இசையமைப்பாளர்கள், பாரதியாரின் எந்தப் பாடல்களுக்கு திரைப்படங்களுக்காக இசையமைத்து உள்ளனர்?
மெல்லிசை மன்னர்
இளையராஜா
வித்யாசாகர்
ஏ.ஆர்.ரகுமான்.
5)"முதல்வன்" படத்தில் அர்ஜூனுக்கும்,ரகுவரனுக்குமிடையிலான தொலைக்காட்சி பேட்டி நல்ல வசனங்களைக் கொண்டிருக்கும்.அந்தப் பேட்டியின் இடையில் ரகுவரன் திருக்குறள் ஒன்றை உதாரணமாய்க் கூறுவார்.அது என்ன?
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1) கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக் கென்ன கட்டுப்பாடு
2)சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
3)உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
4)சோள காட்டு மூலையிலே ...பப்பம்...பப்பரப்பப்பா...
ஒரு சோடி ஒண்ணு சேர்ந்திருச்சு
5)காற்று நம்மை அடிமை என்று விலக்கவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லயே
6)உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
7)பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே,
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே
நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது
8)இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய், ஒதுக்கீடு கேட்கிறாய்
9)நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரச் சின்னம் அலை போல மின்னும்
வரும் பண்டிகை நாட்கள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
18 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 2 |
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
2)நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை
3)ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைப்போல் புது வித்தை காட்டிடவா
4)ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
5)குட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா ஒன்னையும் தொட்டுக்கரேன்
6)கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம
7)சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும
8) தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென வளர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
9) மேடையைப்போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப்போலே உரவும் அல்ல பாதைகள் மாரியே பயணம் செல்ல
10) மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
17 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 1 |
தமிழ்ப்பதிவுகள் என்ற ஊடகத்தில் முதன்முறையாக் கிசுகிசுக்களைச் சூடாக,சுவையாக தந்த போது சாம்புக்களும்,இரவுக்கழுகாரும் தோன்றியிருக்கவில்லை.இப்படியாகத் தானே உருவாக்கப்பட்ட ட்ரெண்ட்டினைத் தீபாவளி ஸ்பெஷலாய் மீண்டும் தருவதில் மெத்த மகிழ்ச்சியே...(ஹி...ஹி..தற்புகழ்ச்சி எல்லாம் எனக்குப் புடிக்காதுங்ணா)
இந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்கள் யார்,யார் என்று கண்டு பிடிப்பது மக்களே உங்கள் சமத்து.ஆனால் ...இவர் தானே ...அவர் என்பது போன்ற உங்களுடைய கேள்விகளுக்கு, என்னுடைய பதில் "நோ காமென்ட்ஸ்" என்று தான் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :-)
1)அத்துவானக் காட்டில் தேன் தேடிய தனித்துவமான சிட்டு, இப்போது கடல் கடந்து சூரியன் மறையாத நாட்டில் இருக்கிறதாம்.யங் ஜிஞ்சரான டீச்சர் இல்லாத வகுப்பில் எலிகள் துள்ளிக்குதித்து விளையாடுகின்றனவாம்.
"எப்போ வருவாரோ...எங்கள் கலி தீர......???"
2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
"....ரமணா...ரகுநாதா...பாற்கடல் வாசா...ஜானகி நேசா...."
3)சோள தோசை சாப்பிட்டேன்,அச்சாபீஸ் போனேனே தவிர வேற எங்கேயும் போகலை என்று தல மேல் அடித்துக் கூறும் கிங்கானவருக்கு மஞ்சத்தண்ணி தெளித்தாயிற்று.கர்நாடக ராஜ்யோத்சவத்தன்று இவரது விக்கெட் போல்டாகவிருக்கிறது. ஏணுங்ணா...அதுக்குப் பொறவாலை எழுதுவீங்ளா?
" ....க்கொடியிலே முத்துகள் கோர்த்தால் புன்னகை என்றே பேர் ஆகும்..."
4)தங்கமணியார் வீட்டுக்குப் போன பின் சங்கங்களில் பிளிறிக்கொண்டிருந்த "ஏக் காவ் மே..ஏக் கிஸான்" நடுவில் இண்டர்வெல் விட்டதற்கான காரணம்,ஊருக்குத் திரும்பியுள்ள ஜூனியருடன் அதிக நேரம் செலவிடத்தானாம்.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இந்தச் சிங்கம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா??
5)நான் ஒரு பாவி..சாரி...ஆவி என்று கூட இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருப்பது நாமக்கோளாறு பிசியின் கல்லூரிக்கால குறும்புகளில் ஒன்று.அமானுஷ்ய ஆவியாருக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?
"நானே வருவேன்..அங்கும் இங்கும்...."
உங்களது ஆதரவுடன் தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி தொடரும்.
14 October 2006
| [+/-] |
விட்டு விடுதலையாகி... - தேன்கூடு போட்டிக்கு |
சமையல் ரூமில இருந்து சப்பாத்தி சுடுற சத்தம் கேக்குது.அனேகமா எங்களுக்கு சப்பாத்தி செஞ்சிட்டு இருக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.ஆன்ட்டி எங்களை இங்கே கூட்டீட்டு வந்த நாளில இருந்து இன்னைய வரைக்கும் எங்களுக்கு ராத்திரி தீஞ்சு போன சப்பாத்திதான் ஆகாரம்.நாங்களும் போட்டதைச் சாப்பிட்டுக்கறோம்;இல்லேன்னா எங்க ஆன்ட்டி கிட்ட திட்டும் உதையும் யாரு வாங்குறது.
நாங்கன்னு சொன்னது என் கூட இருக்கிற அனு,சில்வியா,சித்ரா இவங்களையும் சேர்த்துதான்.அதோ...பச்சை சுடிதார் போட்டிட்டு ஆன்ட்டி துணிகளுக்கு இஸ்திரி போட்டிட்டு இருக்கறது தான் அனு.மத்த ரெண்டு பேரும் வீட்டைத் துடைச்சிட்டு இருக்காங்க. நான் இப்போ தான் என்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து உக்காந்தேன்.சன் நியூஸ் போடற சத்தம் கேக்குது.அட மணி எட்டு ஆயிடுச்சா??
இங்கே இருக்கிற ஸ்கூலில முழுப்பரிச்சை ஆரம்பிச்சிடுச்சி.மதியம் துணி காயப்போடும் போது பார்த்தேன்.பரிட்சை எழுதி முடிச்சிட்டு எல்லாரும், பேடோட வீட்டுக்குப் போயிட்டு இருந்தாங்க.இங்கே ஸ்கூலில யூனிபார்ம் வேற கலர்.இன்னைக்கு தமிழ்ப் பரிச்சையாயிருக்கும்.
என்ன,என்ன கேள்வியெல்லாம் கேட்டாங்களோ?காலாண்டுத் தேர்வில நான் இந்தப் பாடத்தில 86 மார்க்கு வாங்கினேன்.அரையாண்டுத் தேர்வு கூட நல்லாத் தான் எழுதினேன்.எப்படியும் ஒரு 85 மார்க் வாங்கியிருப்பேன்.
"விஜிம்மா..விஜிம்மா....அப்படி என்ன உக்கார்ந்திட்டே கனவு கண்டிட்டு இருக்கே?? ?காலா காலத்துக்கு சாப்பிட வேண்டாமா.."
அட இது எங்க ஆன்ட்டி குரல் போல இருக்கு.இவங்களுக்குக் கூட இப்படியெல்லாம் கூப்பிடத் தெரியுமா??என்னைக்கும் இல்லாம இவ்வளவு பாசமா சாப்பிடக் கூப்பிடறாங்க.இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது.
"வாம்மா விஜி.உன்னைத் தவிர எல்லாரும் சாப்பிட வந்தாச்சு.ஏன் உனக்குப் பசியே எடுக்கலையா?மதியம் சாப்பிட்டதெல்லாம் இன்னேரம் செரிச்சிருக்கணுமே??வந்து சாப்பிடு வா."
எனக்கு எதுவுமே நம்பமுடியலை.ஆன்ட்டியா இப்படி??அதோ..வலது கைப் பக்க மூலைல இருக்கிறது தான் சமையல் ரூம்.அதுக்குப் பக்கமா இருக்கிற சின்ன ரூம் தான் எங்க டைனிங் ஹால்.நான் போய் சாப்பிடப் போறேன்.எல்லாரும் வேலைய முடிச்சிட்டு சாப்பிட வந்திட்டாங்க போல இருக்கு.நாங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திக்கிட்டோம்.எல்லோருக்கும் ஆன்ட்டி இப்படி அன்பா இருக்கறது இது ஒரு அதிர்ச்சியாத் தான் இருந்தது.அதை விடப் பெரிய அதிர்ச்சி,தீஞ்ச சப்பாத்தி தட்டில விழும்னு எதிர் பார்த்து இருந்தா,தட்டில விழுந்த நல்ல சப்பாத்தியப் பார்த்து வந்தது.
"ஹூம்.அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கச்சிவோட சந்தோஷமா இருந்த கொழந்தைக உங்களை இந்தக் கோலத்தில பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு.பாழாப்போன சுனாமி வந்தாலும் வந்தது;எல்லாரோட சந்தோஷத்தையும் வாரீட்டு இல்ல போயிடுச்சு.தெய்வமே...இந்தக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டக் கூடாதா?
சகாயம்,அந்தப் பாக்கெட்டில லட்டு இருக்கு.எல்லாருக்கும் ரெண்டு,ரெண்டு லட்டை வையி...."
லட்டுங்கற பேரைக் கேட்டாலே எனக்கு எங்க பாட்டி ஞாபகம்தான் வரும்.எனக்காக குட்டி,குட்டியா லட்டு செஞ்சு அவங்க கையாலேயே ஊட்டி விடுவாங்க.ஹூம்.எல்லாரும் போயிட்டாங்க.அரைப் பரீட்சை லீவுக்கு குடும்பத்தோட வேளாங்கண்ணி வந்தோம்.எவ்ளோ பெரிய அலை...அப்பெல்லாம் அதோட பேரு சுனாமின்னு தெரியலை.
அறிவியல் பாடத்தில எப்பவோ படிச்ச ஞாபகம்.எங்க தம்பியக் காப்பாத்த முடியலையேன்னு,எங்க அப்பாவும் அவருக்குப் பின்னாடி அம்மாவும் கடலில் குதிச்சது இன்னும் கண்ணு முன்னாடியே இருக்கு.சே... என்னைய மட்டும் விட்டிட்டு எல்லாரும் போயிட்டாங்க.
"விஜி.என்னது இது?சாப்பிடறப்போ கண்ணக் கசக்கீட்டு.தட்டிலே போட்டது வேற அப்படியே இருக்கு.ஒன்னை கேம்பில பார்த்தப்போ இருந்ததை விட,இப்போ ரொம்ப இளைச்சுப் போயிட்டியே??சகாயம்,விஜிக்குக் கொஞ்சம் குருமா ஊத்து.வயசுப் பொண்ணுங்க நல்லா சாப்பிட்டுத் தெம்பா இருக்க வேணாமா?பொண்ணுங்களா,சீக்கிரம் தட்டைக் காலி பண்ணீட்டு,போய் தூங்குங்க.காலையில சீக்கிரமே எழுந்திடணும்.வேன் டாண்ணு ஏழரைக்கெல்லாம் வந்திடும்."
என்னோட லட்டை அனுவுக்குக் கொடுத்திட்டேன்.எதுவுமே சாப்பிடப் புடிக்கலை.காலைல இருந்து அம்மா நெனப்பாவே இருக்கு.நேத்திருந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க.எங்கேயோ போகப் போறோம்னு.எங்கேன்னு மட்டும் தெரியலை.ஆன்ட்டியைக் கேக்கவும் பயமாயிருக்கு.எங்கே கூட்டிட்டுப் போனாலும் பரவாயில்லை ,மூச்சு முட்டிக்கிட்டு இருக்கிற இருட்டான கூண்டில இருந்து கொஞ்சம் நேரம் வெளியே போனா சரிதான்.நாங்க ஒருத்தரை ஒருத்தர் திருதிருன்னு முழிச்சிக்கிட்டே சப்பாத்தியை மென்னு முழுங்கினோம். நாளைக்கு வெளியே போகப் போறோம்கிறதை நெனச்சா ஒரு பக்கம் சந்தோஷமாத்தான் இருக்கு.
"ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...."
"நேரம் கெட்ட நேரத்தில யாரு கூப்பிடறாங்க...ஹூம்..."
"ஹலோ..ஆமாங்க இது கருணை இல்லம் தான்.அட என்ன இது அண்ணாச்சி குரல் மாத்தி எல்லாம் பேசிக்கிட்டு...சௌக்கியமா இருக்கீங்களா?.நானே கூப்பிடணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.எல்லாம் ரெடியா இருக்கு.நாளைக்கு கேட் பாஸ் கொடுத்திட வேண்டியதுதான்.நாலு வருது நாளைக்கு ட்ரிப்பில.அட..ஒங்களுக்கு இல்லாததா??சாமிக்குத் தான மொத படையல்.அய்யோ..அப்படியேல்லாம் நீங்க சொல்லக்கூடாது..நாந்தான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.அப்புறமா செக் வேணாம்.கேஷாவே கொடுத்திடுங்க.சரிங்க அண்ணாச்சி.நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுங்க.நாளைக்குப் பார்ப்போம்.வச்சிடறேன்..."
பொதுவாவே ஆன்ட்டியோட குரல் கணீர்னு கேக்கும்.அதுவும் சந்தோஷத்தில இன்னும் சத்தமா பேசுவாங்க.அவங்க ரூமில ஃபோன்ல ஆன்ட்டி பேசினதில பாதி புரிஞ்ச மாதிரி இருக்கு;புரியாத மாதிரியும் இருக்கு.ஹூம்...என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே...?சே...இந்த கிழிஞ்ச பாயையும், அழுக்குத் தலகாணியையும் பார்த்தா எரிச்சலா வருது.சினிமாவில வார மாதிரி வெள்ளையா,புஸ்ஸுன்னு இருக்கிற மெத்தையில ஒரு நாளாவது படுத்துத் தூங்கணும்.வீட்டில நான் போர்த்தீட்டு இருந்த பச்சைப் போர்வை குளிருக்கு எவ்வளவு நல்லா இருக்கும்..சே..இன்னை ஏன் இப்படி சும்மா சும்மா வீட்டைப் பத்தியே நினைச்சிகிட்டு இருக்கேன்.
"விஜி...இன்னும் தூங்கலியா??? தூக்கம் வரலையா???அப்புறம் நாளைக்கு காலைல ஒருத்தரப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போறோம்.நல்லாத் தூங்கி காலைல சீக்கிரமே எந்திரிச்சுடணும்.உங்களுக்குப் புதுத் துணி வாங்கி வச்சிருக்கு.தலைக்குக் குளிச்சிட்டு அதைப் போட்டுகிட்டு ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகிடணும்.மத்த பொண்ணுங்க கிட்டயும் சொல்லீடு.எல்லாரும் தூங்கீட்டாங்க போல..."
புது ட்ரெஸ் போட்டுகிட்டு யாரோட வீட்டுக்குப் போகப் போறோம்?சுடிதாரா இல்லை பாவாடை தாவணியா?எனக்குப் புடிக்காத சிவப்புக் கலர்ல சுடிதார் எடுத்திருக்க் கூடாது.கடவுளே...ஒரு வேளை சினிமாவில வார மாதிரி எங்களை யாருக்காவது வித்துடப் போறாங்களா??சே....ஆன்ட்டி அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.இத்தனை நாளா எங்களைக் கஷ்டப்படுத்தினதை நெனச்சிப் பார்த்து இப்போ மனசு மாறியிருக்காங்க.இல்ல..இல்ல..ஆன்ட்டி எங்கேயோ தப்பான இடத்துக்குத் தான் கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தோணுது.ஆனா எங்கே கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தெரியலையே...கடவுளே...எங்களுக்கு விடுதலை கெடையாதா??
காலைல இருந்து வேலை செஞ்ச அசதீல எப்போ தூங்கினேன்,எப்போ முழிச்சேன்னு தெரியலை.எங்க எல்லார்த்தையும் நல்ல வாசனை சோப்பு போட்டு குளிக்க வச்சு,ஆன்ட்டி போடற செண்ட் அடிச்சு,வாங்கி வச்சிருந்த துணியப் போட்டுக்க வச்சி வேன் ஏறினப்ப மணி 7.35 . நல்ல வேளை என்னோட புது சுடிதார் சிவப்பு கலர்ல இல்லை.என்னோட சுடிதாரை விட அனுவோட சுடிதார் நல்லா இருக்குது.எல்லாரும் புது ட்ரஸ் போட்டிட்டு வேன்ல வெளியே போற சந்தோஷத்தில இருந்தாங்க.ஆனா,எனக்கு மட்டும் ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு நெனப்பு.
கில்லி படத்தில வார மாதிரி ஒரு வெள்ளைக் கலர் வேன்.ஆன்ட்டி நல்ல மூடில இருந்தாங்க போலிருக்கு.ஏதோ பாட்டை முணுமுணுத்திட்டே வந்தாங்க.நான் சாமியக் கும்பிட்டுக் கிட்டே வேனுக்குள்ள ஏறினேன்.இங்க வந்த இந்த மூணு மாசத்தில மொத முறையா இப்போ தான் கேட்டைத் தாண்டி வெளியே போறோம்.இதுவே ஒரு பெரிய விடுதலை கிடைச்ச மாதிரி அனுவோட முகத்தில சந்தோஷம்.
"டேய்..சுரேசு...காலையிலயே சரக்கைப் போட்டிட்டு வந்திட்டியா??ரோட்டைப் பார்த்து மெதுவா ஓட்டு.வேற வண்டி இல்லையா??இந்த பாழாப்போன குவாலிசையே எடுத்திட்டு வந்து எழவு கொட்டாட்டி என்ன?"
வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்த எங்களுக்கு அந்த ரோட்டோரக் காட்சிகள் ரொம்ப புடிச்சுப் போச்சு.வேடிக்கை பார்த்திட்டு வந்தோம்.திடீர்னு ஒரு ஐடியா தோணுச்சு.பாத்ரூம் வருதுன்னு சொல்லி வேனை நிப்பாட்டச் சொல்லி,இறங்கி ஓடிப் போயிடலாம்னு தோணிச்சு.கொஞ்ச நேரம் பொறுத்து சொல்வோம்னு வெயிட் பண்ணீட்டு இருக்கேன்.
க்ரீச்ச்...க்ரீச்ச்ச்....
"டேய்...டேய்....பார்த்து மெதுவா பிரேக்கைப் போடு..."
"சாரிக்கா...இனிமே பார்த்துப் போறேங்கா..."
"அய்யோ..எருமை மாடு நடு ரோட்டில...பார்த்து...அம்மா....."
க்ரீச்...டபார்.....
"அய்யோ...அம்மா...கர்த்தரே.....அய்யோ...."
உங்க எல்லாருக்கும் டாடா....விடுதலை கொடுத்த சாமியப் பார்க்கப் போறேன்.உங்களோட கோரிக்கை ஏதாச்சியும் இருந்தா சொல்லுங்க...அவர் கிட்டே சேர்த்திடறேன்.....
---------------------------------------------------------------------------------
சற்றே பெரிய கதை,உங்களது ஆதரவினை வேண்டி...
அன்புடன்,
சுதர்சன்.கோபால்
---------------------------------------------------------------------------------
11 October 2006
| [+/-] |
மால்குடியும் சில கேள்விகளும் |
R K நாராயண் (அக்டோபர் 10, 1906 - மே 13, 2001)
இவரது முழுப்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி.ஆரம்ப காலங்களில் R K நாராயணசுவாமி என்ற பெயரில் எழுதி வந்த இவர் கிரஹாம் கிரீனின் ஆலோசனைப்படி "Swami and Friends" என்ற படைப்பின் வெளியீட்டிலிருந்து தனது பெயரை "R K நாராயண்" என்று சுருக்கி வைத்துக் கொண்டார்.
பாடப்புத்தகம் போரடிக்கிறது என்ற காரணத்தால் கல்லூரியில் ஆங்கில நுழைவுத் தேர்வில் முதல் முறை எழுதும்போது கோட்டைவிட்டார்.ஆனால் ஒரு வருடம் கழித்து திரும்பவும் எழுதி மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமும் பெற்றார்.
இவருடைய படைப்புகள் ஹீப்ரு மற்றும் அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
1958ல் சாஹித்ய அகாதமி ,1964ல் பத்ம பூஷன்,1980ல் ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சர் அமைப்பால் பென்சன் விருது, 2000ல் பத்ம விபூஷன் என்று இவருக்குக் கிடைத்த விருதுகள் ஏராளம்.
---------------------------------------------------------------------------------------------------
இதோ இவரைப் பற்றியும் படைப்புகள் பற்றியும் ஒரு சில கேள்விகள்.சரியான பதில் தருவோருக்கு "மால்குடி கொண்டான்" என்ற பட்டமும் அவரவரது கட்சி சார்புக்கு ஏற்றவாறு மஞ்சள்/பச்சை/கருப்புத் துண்டுகளோ வழங்கப்படும்.
1) "Swami and Friends" தொகுப்பில் வரும் சுவாமியின் நண்பர்கள் பெயர் என்ன?
2) R K நாராயணின் முதல் புத்தகம் வெளியாக உதவியவர் யார்?
3) தென் இந்தியாவின் எந்த கற்பனை நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு இவரது கதைகள் எழுதப்பட்டன?
4) எந்த ஆண்டு "The Vendor of Sweets" வெளியானது?
5) "The Guide" என்ற நாவலின் கதை நாயகன் யார்?
6) மால்குடியின் மூன்று முக்கிய லேண்ட்மார்க்குகளைக் குறிப்பிடவும்.
7) R K நாராயண் எந்த ஊரில் தனது "The Guide" நாவலை எழுதினார்?
8) முதன் முதலில் வெளியான R K நாராயணின் படைப்பு எது?
9) இவரது படைப்புகளுக்குப் பாந்தமான ஓவியங்களை வரைந்த இவரது சகோதரர் பெயர் என்ன?
10) இவர் எழுதிய இரண்டு பயணக் குறிப்புகளின் பெயரைக் கூறவும்.


