தமிழ்த்திரையுலகின் மறக்கமுடியாத தலை பத்து நபர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த கலைவாணரது பிறந்த நாள் இன்று.இது பற்றி நினைவு கூர்ந்த தருமிக்கும்,பாலபாரதிக்கும் நன்றிகள்.
இவரது ஆரம்பகாலத்திரைப்படங்களைப் பற்றிய ஒரு கதம்பம் தான் இந்தப் பதிவு.
1935:- ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான "மேனகா" என்னும் திரைப்படம் தான் என்.எஸ்.கே நடிப்பில் வெளியான முதல் படம்.இதில் தீய குணம் கொண்ட சாமா ஐயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1936:- திரும்பவும் ராஜா சாண்டோவின் இயக்கத்தில் "சந்திரகாந்தா" என்ற திரைப்படத்தில் நடித்தார்.நயவஞ்சகச் செயலுக்குத் துணை போனதால் சிறிது லாபம் அடைந்து தனது பழைய நிலையை மறந்த நாவித முனியன் பாத்திரத்தில் கலக்கியிருந்தார்.
1936:- இந்த ஆண்டு வெளியான "சதி லீலாவதி" தான் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் என்றாலும் "மேனகா" முந்திக்கொண்டது.எல்லீஸ்.ஆர்.டங்கனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தான் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரனுக்கும் முதல் படம்.
1937:- முதன்முதலில் மதுரம் அவர்களுடன் சேர்ந்து நடித்த படமான "வசந்தசேனா" வெளியானது.ராஜா சாண்டோவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின்போது தான் என்.எஸ்.கே மதுரத்தைச் சந்தித்தார்.இருவரும் ராஜா சாண்டோவின் தலைமையில் தம்பதிகளாக சேர்ந்து வாழ முற்பட்டனர்.
1937:- எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் "அம்பிகாபதி".
1938:- ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "தக்ஷயக்ஞம்".
1939:- ராஜா சாண்டோ இயக்கத்தில் "திருநீலகண்டர்",ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் "மாயா மச்சீந்திரா",ராவ் இயக்கத்தில் "ரம்பையின் காதல்",ரகுநாத் இயக்கத்தில் "ஜோதி (அ) ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகள்".
(தொடரும்)
29 November 2006
| [+/-] |
Remembering N.S.K - ஸ்பெஷல் "ஓ"மப்பொடி |
16 November 2006
| [+/-] |
என்னுடைய ஐடியை ஹேக் செஞ்சிட்டாங்க. |
மாசம் ஒன்று என்ற கணக்கில் பதிவு போடும் என்னைப் போன்ற சோம்பேறிகளின் ப்ளாக்கர் ஐடியை ஹேக் செய்வதனால் யாருக்கு என்ன லாபம்?
ஒண்ணுமே புரியலை...ஏதாவது அயல்நாட்டு சதியான்னு தெரியலை?
ஆகவே மக்கா,உங்க பதிவுகளில் ஏதாவது ஏடாகூடமான பின்னூட்டம் என்னோட பெயரில இருந்தாத் தெரியப் படுத்துங்க.அதை இட்டது யார்னு கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.
Inconvenience caused is highly regretted.
"இறைவா.எனது நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று.எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்" - ஜக்குபாய்
19 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 3 |
1) பாரதியாரது பாடல்கள் முதன் முதலில் திரையில் ஒலித்தது எந்தப் படத்தில்?
2) "பல்லாண்டு வாழ்க" என்ற படத்தில் இடம் பெறும் "ஒன்றே குலம் என்று பாடுவோம்" பாடலுக்கு முன்னால் சில திருக்குறள்கள் இடம் பெற்றிருக்கும்.அவை எவை?
3) பட்டுக்கோட்டையார் இறுதியாக எழுதிய பாடல் எது?
4) கீழ்க்கண்ட இசையமைப்பாளர்கள், பாரதியாரின் எந்தப் பாடல்களுக்கு திரைப்படங்களுக்காக இசையமைத்து உள்ளனர்?
மெல்லிசை மன்னர்
இளையராஜா
வித்யாசாகர்
ஏ.ஆர்.ரகுமான்.
5)"முதல்வன்" படத்தில் அர்ஜூனுக்கும்,ரகுவரனுக்குமிடையிலான தொலைக்காட்சி பேட்டி நல்ல வசனங்களைக் கொண்டிருக்கும்.அந்தப் பேட்டியின் இடையில் ரகுவரன் திருக்குறள் ஒன்றை உதாரணமாய்க் கூறுவார்.அது என்ன?
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1) கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக் கென்ன கட்டுப்பாடு
2)சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
3)உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
4)சோள காட்டு மூலையிலே ...பப்பம்...பப்பரப்பப்பா...
ஒரு சோடி ஒண்ணு சேர்ந்திருச்சு
5)காற்று நம்மை அடிமை என்று விலக்கவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லயே
6)உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
7)பிள்ளைக்கூட்டங்களைப் பார்க்கையிலே,
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே
நல்லவரெல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது
8)இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய், ஒதுக்கீடு கேட்கிறாய்
9)நடமாடும் மேகம் நவ நாகரீகம்
அலங்காரச் சின்னம் அலை போல மின்னும்
வரும் பண்டிகை நாட்கள், அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளித்தர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
18 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 2 |
நான் அடிக்கடி முணுமுணுக்கும் சில பாடல்களின் வரிகள் கீழே உள்ளன.
என்ன பாடல் ??? என்ன படம் ???
1)ஏரிக்கரையில் ஜோடிப் பறவைகள் எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள் அதிலே உலகம் ஆரம்பம்
2)நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை
3)ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைப்போல் புது வித்தை காட்டிடவா
4)ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
5)குட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா ஒன்னையும் தொட்டுக்கரேன்
6)கன்னித் தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம
7)சொந்த ஆகாயம் வேண்டும் ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும
8) தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென வளர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
9) மேடையைப்போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப்போலே உரவும் அல்ல பாதைகள் மாரியே பயணம் செல்ல
10) மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
17 October 2006
| [+/-] |
தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி - 1 |
தமிழ்ப்பதிவுகள் என்ற ஊடகத்தில் முதன்முறையாக் கிசுகிசுக்களைச் சூடாக,சுவையாக தந்த போது சாம்புக்களும்,இரவுக்கழுகாரும் தோன்றியிருக்கவில்லை.இப்படியாகத் தானே உருவாக்கப்பட்ட ட்ரெண்ட்டினைத் தீபாவளி ஸ்பெஷலாய் மீண்டும் தருவதில் மெத்த மகிழ்ச்சியே...(ஹி...ஹி..தற்புகழ்ச்சி எல்லாம் எனக்குப் புடிக்காதுங்ணா)
இந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்கள் யார்,யார் என்று கண்டு பிடிப்பது மக்களே உங்கள் சமத்து.ஆனால் ...இவர் தானே ...அவர் என்பது போன்ற உங்களுடைய கேள்விகளுக்கு, என்னுடைய பதில் "நோ காமென்ட்ஸ்" என்று தான் இருக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :-)
1)அத்துவானக் காட்டில் தேன் தேடிய தனித்துவமான சிட்டு, இப்போது கடல் கடந்து சூரியன் மறையாத நாட்டில் இருக்கிறதாம்.யங் ஜிஞ்சரான டீச்சர் இல்லாத வகுப்பில் எலிகள் துள்ளிக்குதித்து விளையாடுகின்றனவாம்.
"எப்போ வருவாரோ...எங்கள் கலி தீர......???"
2) பெரிய டேமேஜரும்,பெரும்பாலான இனிப்புகளின் அடிப்படையுமான நம்ம ராஜீயின் படைப்புகள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிவலம் வரவிருக்கின்றன.தெலுங்கில் வரவிருக்கும் இந்தத் தொடர் ப்ளேக் மாரியம்மனைப் பற்றி இருக்கலாம் என்று நெம்பத்தந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
"....ரமணா...ரகுநாதா...பாற்கடல் வாசா...ஜானகி நேசா...."
3)சோள தோசை சாப்பிட்டேன்,அச்சாபீஸ் போனேனே தவிர வேற எங்கேயும் போகலை என்று தல மேல் அடித்துக் கூறும் கிங்கானவருக்கு மஞ்சத்தண்ணி தெளித்தாயிற்று.கர்நாடக ராஜ்யோத்சவத்தன்று இவரது விக்கெட் போல்டாகவிருக்கிறது. ஏணுங்ணா...அதுக்குப் பொறவாலை எழுதுவீங்ளா?
" ....க்கொடியிலே முத்துகள் கோர்த்தால் புன்னகை என்றே பேர் ஆகும்..."
4)தங்கமணியார் வீட்டுக்குப் போன பின் சங்கங்களில் பிளிறிக்கொண்டிருந்த "ஏக் காவ் மே..ஏக் கிஸான்" நடுவில் இண்டர்வெல் விட்டதற்கான காரணம்,ஊருக்குத் திரும்பியுள்ள ஜூனியருடன் அதிக நேரம் செலவிடத்தானாம்.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இந்தச் சிங்கம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா??
5)நான் ஒரு பாவி..சாரி...ஆவி என்று கூட இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருப்பது நாமக்கோளாறு பிசியின் கல்லூரிக்கால குறும்புகளில் ஒன்று.அமானுஷ்ய ஆவியாருக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?
"நானே வருவேன்..அங்கும் இங்கும்...."
உங்களது ஆதரவுடன் தீபாவளி ஸ்பெஷல் "ஓ"மப்பொடி தொடரும்.
14 October 2006
| [+/-] |
விட்டு விடுதலையாகி... - தேன்கூடு போட்டிக்கு |
சமையல் ரூமில இருந்து சப்பாத்தி சுடுற சத்தம் கேக்குது.அனேகமா எங்களுக்கு சப்பாத்தி செஞ்சிட்டு இருக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.ஆன்ட்டி எங்களை இங்கே கூட்டீட்டு வந்த நாளில இருந்து இன்னைய வரைக்கும் எங்களுக்கு ராத்திரி தீஞ்சு போன சப்பாத்திதான் ஆகாரம்.நாங்களும் போட்டதைச் சாப்பிட்டுக்கறோம்;இல்லேன்னா எங்க ஆன்ட்டி கிட்ட திட்டும் உதையும் யாரு வாங்குறது.
நாங்கன்னு சொன்னது என் கூட இருக்கிற அனு,சில்வியா,சித்ரா இவங்களையும் சேர்த்துதான்.அதோ...பச்சை சுடிதார் போட்டிட்டு ஆன்ட்டி துணிகளுக்கு இஸ்திரி போட்டிட்டு இருக்கறது தான் அனு.மத்த ரெண்டு பேரும் வீட்டைத் துடைச்சிட்டு இருக்காங்க. நான் இப்போ தான் என்னோட வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து உக்காந்தேன்.சன் நியூஸ் போடற சத்தம் கேக்குது.அட மணி எட்டு ஆயிடுச்சா??
இங்கே இருக்கிற ஸ்கூலில முழுப்பரிச்சை ஆரம்பிச்சிடுச்சி.மதியம் துணி காயப்போடும் போது பார்த்தேன்.பரிட்சை எழுதி முடிச்சிட்டு எல்லாரும், பேடோட வீட்டுக்குப் போயிட்டு இருந்தாங்க.இங்கே ஸ்கூலில யூனிபார்ம் வேற கலர்.இன்னைக்கு தமிழ்ப் பரிச்சையாயிருக்கும்.
என்ன,என்ன கேள்வியெல்லாம் கேட்டாங்களோ?காலாண்டுத் தேர்வில நான் இந்தப் பாடத்தில 86 மார்க்கு வாங்கினேன்.அரையாண்டுத் தேர்வு கூட நல்லாத் தான் எழுதினேன்.எப்படியும் ஒரு 85 மார்க் வாங்கியிருப்பேன்.
"விஜிம்மா..விஜிம்மா....அப்படி என்ன உக்கார்ந்திட்டே கனவு கண்டிட்டு இருக்கே?? ?காலா காலத்துக்கு சாப்பிட வேண்டாமா.."
அட இது எங்க ஆன்ட்டி குரல் போல இருக்கு.இவங்களுக்குக் கூட இப்படியெல்லாம் கூப்பிடத் தெரியுமா??என்னைக்கும் இல்லாம இவ்வளவு பாசமா சாப்பிடக் கூப்பிடறாங்க.இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது.
"வாம்மா விஜி.உன்னைத் தவிர எல்லாரும் சாப்பிட வந்தாச்சு.ஏன் உனக்குப் பசியே எடுக்கலையா?மதியம் சாப்பிட்டதெல்லாம் இன்னேரம் செரிச்சிருக்கணுமே??வந்து சாப்பிடு வா."
எனக்கு எதுவுமே நம்பமுடியலை.ஆன்ட்டியா இப்படி??அதோ..வலது கைப் பக்க மூலைல இருக்கிறது தான் சமையல் ரூம்.அதுக்குப் பக்கமா இருக்கிற சின்ன ரூம் தான் எங்க டைனிங் ஹால்.நான் போய் சாப்பிடப் போறேன்.எல்லாரும் வேலைய முடிச்சிட்டு சாப்பிட வந்திட்டாங்க போல இருக்கு.நாங்க எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திக்கிட்டோம்.எல்லோருக்கும் ஆன்ட்டி இப்படி அன்பா இருக்கறது இது ஒரு அதிர்ச்சியாத் தான் இருந்தது.அதை விடப் பெரிய அதிர்ச்சி,தீஞ்ச சப்பாத்தி தட்டில விழும்னு எதிர் பார்த்து இருந்தா,தட்டில விழுந்த நல்ல சப்பாத்தியப் பார்த்து வந்தது.
"ஹூம்.அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கச்சிவோட சந்தோஷமா இருந்த கொழந்தைக உங்களை இந்தக் கோலத்தில பார்க்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு.பாழாப்போன சுனாமி வந்தாலும் வந்தது;எல்லாரோட சந்தோஷத்தையும் வாரீட்டு இல்ல போயிடுச்சு.தெய்வமே...இந்தக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டக் கூடாதா?
சகாயம்,அந்தப் பாக்கெட்டில லட்டு இருக்கு.எல்லாருக்கும் ரெண்டு,ரெண்டு லட்டை வையி...."
லட்டுங்கற பேரைக் கேட்டாலே எனக்கு எங்க பாட்டி ஞாபகம்தான் வரும்.எனக்காக குட்டி,குட்டியா லட்டு செஞ்சு அவங்க கையாலேயே ஊட்டி விடுவாங்க.ஹூம்.எல்லாரும் போயிட்டாங்க.அரைப் பரீட்சை லீவுக்கு குடும்பத்தோட வேளாங்கண்ணி வந்தோம்.எவ்ளோ பெரிய அலை...அப்பெல்லாம் அதோட பேரு சுனாமின்னு தெரியலை.
அறிவியல் பாடத்தில எப்பவோ படிச்ச ஞாபகம்.எங்க தம்பியக் காப்பாத்த முடியலையேன்னு,எங்க அப்பாவும் அவருக்குப் பின்னாடி அம்மாவும் கடலில் குதிச்சது இன்னும் கண்ணு முன்னாடியே இருக்கு.சே... என்னைய மட்டும் விட்டிட்டு எல்லாரும் போயிட்டாங்க.
"விஜி.என்னது இது?சாப்பிடறப்போ கண்ணக் கசக்கீட்டு.தட்டிலே போட்டது வேற அப்படியே இருக்கு.ஒன்னை கேம்பில பார்த்தப்போ இருந்ததை விட,இப்போ ரொம்ப இளைச்சுப் போயிட்டியே??சகாயம்,விஜிக்குக் கொஞ்சம் குருமா ஊத்து.வயசுப் பொண்ணுங்க நல்லா சாப்பிட்டுத் தெம்பா இருக்க வேணாமா?பொண்ணுங்களா,சீக்கிரம் தட்டைக் காலி பண்ணீட்டு,போய் தூங்குங்க.காலையில சீக்கிரமே எழுந்திடணும்.வேன் டாண்ணு ஏழரைக்கெல்லாம் வந்திடும்."
என்னோட லட்டை அனுவுக்குக் கொடுத்திட்டேன்.எதுவுமே சாப்பிடப் புடிக்கலை.காலைல இருந்து அம்மா நெனப்பாவே இருக்கு.நேத்திருந்து சொல்லிக்கிட்டே இருக்காங்க.எங்கேயோ போகப் போறோம்னு.எங்கேன்னு மட்டும் தெரியலை.ஆன்ட்டியைக் கேக்கவும் பயமாயிருக்கு.எங்கே கூட்டிட்டுப் போனாலும் பரவாயில்லை ,மூச்சு முட்டிக்கிட்டு இருக்கிற இருட்டான கூண்டில இருந்து கொஞ்சம் நேரம் வெளியே போனா சரிதான்.நாங்க ஒருத்தரை ஒருத்தர் திருதிருன்னு முழிச்சிக்கிட்டே சப்பாத்தியை மென்னு முழுங்கினோம். நாளைக்கு வெளியே போகப் போறோம்கிறதை நெனச்சா ஒரு பக்கம் சந்தோஷமாத்தான் இருக்கு.
"ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...."
"நேரம் கெட்ட நேரத்தில யாரு கூப்பிடறாங்க...ஹூம்..."
"ஹலோ..ஆமாங்க இது கருணை இல்லம் தான்.அட என்ன இது அண்ணாச்சி குரல் மாத்தி எல்லாம் பேசிக்கிட்டு...சௌக்கியமா இருக்கீங்களா?.நானே கூப்பிடணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.எல்லாம் ரெடியா இருக்கு.நாளைக்கு கேட் பாஸ் கொடுத்திட வேண்டியதுதான்.நாலு வருது நாளைக்கு ட்ரிப்பில.அட..ஒங்களுக்கு இல்லாததா??சாமிக்குத் தான மொத படையல்.அய்யோ..அப்படியேல்லாம் நீங்க சொல்லக்கூடாது..நாந்தான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.அப்புறமா செக் வேணாம்.கேஷாவே கொடுத்திடுங்க.சரிங்க அண்ணாச்சி.நல்லாத் தூங்கி ரெஸ்ட் எடுங்க.நாளைக்குப் பார்ப்போம்.வச்சிடறேன்..."
பொதுவாவே ஆன்ட்டியோட குரல் கணீர்னு கேக்கும்.அதுவும் சந்தோஷத்தில இன்னும் சத்தமா பேசுவாங்க.அவங்க ரூமில ஃபோன்ல ஆன்ட்டி பேசினதில பாதி புரிஞ்ச மாதிரி இருக்கு;புரியாத மாதிரியும் இருக்கு.ஹூம்...என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே...?சே...இந்த கிழிஞ்ச பாயையும், அழுக்குத் தலகாணியையும் பார்த்தா எரிச்சலா வருது.சினிமாவில வார மாதிரி வெள்ளையா,புஸ்ஸுன்னு இருக்கிற மெத்தையில ஒரு நாளாவது படுத்துத் தூங்கணும்.வீட்டில நான் போர்த்தீட்டு இருந்த பச்சைப் போர்வை குளிருக்கு எவ்வளவு நல்லா இருக்கும்..சே..இன்னை ஏன் இப்படி சும்மா சும்மா வீட்டைப் பத்தியே நினைச்சிகிட்டு இருக்கேன்.
"விஜி...இன்னும் தூங்கலியா??? தூக்கம் வரலையா???அப்புறம் நாளைக்கு காலைல ஒருத்தரப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போறோம்.நல்லாத் தூங்கி காலைல சீக்கிரமே எந்திரிச்சுடணும்.உங்களுக்குப் புதுத் துணி வாங்கி வச்சிருக்கு.தலைக்குக் குளிச்சிட்டு அதைப் போட்டுகிட்டு ஏழு மணிக்கெல்லாம் ரெடியாகிடணும்.மத்த பொண்ணுங்க கிட்டயும் சொல்லீடு.எல்லாரும் தூங்கீட்டாங்க போல..."
புது ட்ரெஸ் போட்டுகிட்டு யாரோட வீட்டுக்குப் போகப் போறோம்?சுடிதாரா இல்லை பாவாடை தாவணியா?எனக்குப் புடிக்காத சிவப்புக் கலர்ல சுடிதார் எடுத்திருக்க் கூடாது.கடவுளே...ஒரு வேளை சினிமாவில வார மாதிரி எங்களை யாருக்காவது வித்துடப் போறாங்களா??சே....ஆன்ட்டி அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.இத்தனை நாளா எங்களைக் கஷ்டப்படுத்தினதை நெனச்சிப் பார்த்து இப்போ மனசு மாறியிருக்காங்க.இல்ல..இல்ல..ஆன்ட்டி எங்கேயோ தப்பான இடத்துக்குத் தான் கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தோணுது.ஆனா எங்கே கூட்டிட்டுப் போகப் போறாங்கன்னு தெரியலையே...கடவுளே...எங்களுக்கு விடுதலை கெடையாதா??
காலைல இருந்து வேலை செஞ்ச அசதீல எப்போ தூங்கினேன்,எப்போ முழிச்சேன்னு தெரியலை.எங்க எல்லார்த்தையும் நல்ல வாசனை சோப்பு போட்டு குளிக்க வச்சு,ஆன்ட்டி போடற செண்ட் அடிச்சு,வாங்கி வச்சிருந்த துணியப் போட்டுக்க வச்சி வேன் ஏறினப்ப மணி 7.35 . நல்ல வேளை என்னோட புது சுடிதார் சிவப்பு கலர்ல இல்லை.என்னோட சுடிதாரை விட அனுவோட சுடிதார் நல்லா இருக்குது.எல்லாரும் புது ட்ரஸ் போட்டிட்டு வேன்ல வெளியே போற சந்தோஷத்தில இருந்தாங்க.ஆனா,எனக்கு மட்டும் ஏதோ நடக்கப் போகுதுன்னு ஒரு நெனப்பு.
கில்லி படத்தில வார மாதிரி ஒரு வெள்ளைக் கலர் வேன்.ஆன்ட்டி நல்ல மூடில இருந்தாங்க போலிருக்கு.ஏதோ பாட்டை முணுமுணுத்திட்டே வந்தாங்க.நான் சாமியக் கும்பிட்டுக் கிட்டே வேனுக்குள்ள ஏறினேன்.இங்க வந்த இந்த மூணு மாசத்தில மொத முறையா இப்போ தான் கேட்டைத் தாண்டி வெளியே போறோம்.இதுவே ஒரு பெரிய விடுதலை கிடைச்ச மாதிரி அனுவோட முகத்தில சந்தோஷம்.
"டேய்..சுரேசு...காலையிலயே சரக்கைப் போட்டிட்டு வந்திட்டியா??ரோட்டைப் பார்த்து மெதுவா ஓட்டு.வேற வண்டி இல்லையா??இந்த பாழாப்போன குவாலிசையே எடுத்திட்டு வந்து எழவு கொட்டாட்டி என்ன?"
வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்த எங்களுக்கு அந்த ரோட்டோரக் காட்சிகள் ரொம்ப புடிச்சுப் போச்சு.வேடிக்கை பார்த்திட்டு வந்தோம்.திடீர்னு ஒரு ஐடியா தோணுச்சு.பாத்ரூம் வருதுன்னு சொல்லி வேனை நிப்பாட்டச் சொல்லி,இறங்கி ஓடிப் போயிடலாம்னு தோணிச்சு.கொஞ்ச நேரம் பொறுத்து சொல்வோம்னு வெயிட் பண்ணீட்டு இருக்கேன்.
க்ரீச்ச்...க்ரீச்ச்ச்....
"டேய்...டேய்....பார்த்து மெதுவா பிரேக்கைப் போடு..."
"சாரிக்கா...இனிமே பார்த்துப் போறேங்கா..."
"அய்யோ..எருமை மாடு நடு ரோட்டில...பார்த்து...அம்மா....."
க்ரீச்...டபார்.....
"அய்யோ...அம்மா...கர்த்தரே.....அய்யோ...."
உங்க எல்லாருக்கும் டாடா....விடுதலை கொடுத்த சாமியப் பார்க்கப் போறேன்.உங்களோட கோரிக்கை ஏதாச்சியும் இருந்தா சொல்லுங்க...அவர் கிட்டே சேர்த்திடறேன்.....
---------------------------------------------------------------------------------
சற்றே பெரிய கதை,உங்களது ஆதரவினை வேண்டி...
அன்புடன்,
சுதர்சன்.கோபால்
---------------------------------------------------------------------------------
11 October 2006
| [+/-] |
மால்குடியும் சில கேள்விகளும் |
R K நாராயண் (அக்டோபர் 10, 1906 - மே 13, 2001)
இவரது முழுப்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி.ஆரம்ப காலங்களில் R K நாராயணசுவாமி என்ற பெயரில் எழுதி வந்த இவர் கிரஹாம் கிரீனின் ஆலோசனைப்படி "Swami and Friends" என்ற படைப்பின் வெளியீட்டிலிருந்து தனது பெயரை "R K நாராயண்" என்று சுருக்கி வைத்துக் கொண்டார்.
பாடப்புத்தகம் போரடிக்கிறது என்ற காரணத்தால் கல்லூரியில் ஆங்கில நுழைவுத் தேர்வில் முதல் முறை எழுதும்போது கோட்டைவிட்டார்.ஆனால் ஒரு வருடம் கழித்து திரும்பவும் எழுதி மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டமும் பெற்றார்.
இவருடைய படைப்புகள் ஹீப்ரு மற்றும் அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.
1958ல் சாஹித்ய அகாதமி ,1964ல் பத்ம பூஷன்,1980ல் ராயல் சொசைட்டி ஆஃப் லிட்டரேச்சர் அமைப்பால் பென்சன் விருது, 2000ல் பத்ம விபூஷன் என்று இவருக்குக் கிடைத்த விருதுகள் ஏராளம்.
---------------------------------------------------------------------------------------------------
இதோ இவரைப் பற்றியும் படைப்புகள் பற்றியும் ஒரு சில கேள்விகள்.சரியான பதில் தருவோருக்கு "மால்குடி கொண்டான்" என்ற பட்டமும் அவரவரது கட்சி சார்புக்கு ஏற்றவாறு மஞ்சள்/பச்சை/கருப்புத் துண்டுகளோ வழங்கப்படும்.
1) "Swami and Friends" தொகுப்பில் வரும் சுவாமியின் நண்பர்கள் பெயர் என்ன?
2) R K நாராயணின் முதல் புத்தகம் வெளியாக உதவியவர் யார்?
3) தென் இந்தியாவின் எந்த கற்பனை நகரத்தினை அடிப்படையாகக் கொண்டு இவரது கதைகள் எழுதப்பட்டன?
4) எந்த ஆண்டு "The Vendor of Sweets" வெளியானது?
5) "The Guide" என்ற நாவலின் கதை நாயகன் யார்?
6) மால்குடியின் மூன்று முக்கிய லேண்ட்மார்க்குகளைக் குறிப்பிடவும்.
7) R K நாராயண் எந்த ஊரில் தனது "The Guide" நாவலை எழுதினார்?
8) முதன் முதலில் வெளியான R K நாராயணின் படைப்பு எது?
9) இவரது படைப்புகளுக்குப் பாந்தமான ஓவியங்களை வரைந்த இவரது சகோதரர் பெயர் என்ன?
10) இவர் எழுதிய இரண்டு பயணக் குறிப்புகளின் பெயரைக் கூறவும்.
10 October 2006
| [+/-] |
பசந்தீ,உன்னோட பேரு என்ன? |
இருக்கையுடன் கட்டிப்போடும் திரைக்கதை,அற்புதமான நடிப்பு,தேர்ந்த நடிகர் தேர்வு,கதைக்கு மிகவும் பொருத்தமான ஒளிப்பதிவு,பாந்தமான இசை என்று ஒரு படம் வெற்றி பெறத் தேவையான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய"ஷோலே"வில் இடம்பெற்ற மேற்படி வசனத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
1975ல் வெளியாகி சக்கை போடு போட்ட படமான "ஷோலே",திரும்பவும் ராம்கோபால் வர்மாவால் எடுக்கப்பட்டு வருகிறது.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கு,"ராம் கோபால் வர்மாவின் ஷோலே" என்று பெயரிடப்பட்டு உள்ளது.தனது .ஃபேக்டரியிலிருந்து புதிய பொருட்களைச் சீரான கால இடைவெளியில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் ராம் கோபால் வர்மா இந்தப் படத்தை இயக்குவது ஆட்லேப்ஸுக்காக.
ஹேமமாலினி ஏற்று நடித்த பசந்தீ கதாபாத்திரத்தைத் தவிர மற்ற முக்கிய பாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு முடிந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் மும்பையில் ஆரம்பித்துவிட்டது.கப்பார்சிங்காக அமிதாப் பச்சன்,வீருவாக அஜய் தேவ்கன்,ஜெய்யாக மோஹித்,தாக்கூராக மோகன்லால்,விதவை ராதாவாக சுஷ்மிதா சென் என்று ஒரு கலவையான நட்சத்திரக் கூட்டமே இதில் தெறமை காட்டுகிறது.இடைவேளைக்குப் பின்னால் வரும் "மெஹ்பூபா" பாடலை யாராலும் மறக்க முடியாது எனலாம்.அந்தப் பாடலுக்கு ஆடவிருப்பவர் யார் தெரியுமா? வர்மாவின் உள்ளம் கவர் கள்ளி ஊர்மிளா தான்.
போன வாரம் கப்பார்சிங்கின் புதிய தோற்றம் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அமிதாப்பினால் வெளிவிடப்பட்டது.அதைத் தான் போன பதிவில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஹூம்.தமிழில் இப்படிப் பழைய படங்களைத் திரும்ப எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சூர்யா-ஜோ நடிப்பில் மிஸ்ஸியம்மா,சீயான் - சதா நடிப்பில் பலே பாண்டியா என்று எனது படத் தேர்வுகள் நீளும் ஒரு மைலுக்கு.தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகளில் எந்தப் படங்களை,யார் நடிப்பில் பார்க்க உங்களுக்கு விருப்பம்??
காசா..பணமா..சும்மா அடிச்சி ஆடுங்கப்பா...
09 October 2006
| [+/-] |
கலைநிகழ்ச்சியும்,கட்டான ஒரு டெலிஃபோன் கம்பியும் |
"ஹலோ...ம்மா..நான் தான் பேசறேன்.இவ்ளோ நேரமா டெலிஃபோன் அடிக்குது.என்ன செஞ்சிட்டு இருந்தீங்க??"
"நல்லாருக்கியா தம்பி. குப்பையக் கொண்டு போய்க் கொட்டப் போயிருந்தேன். வரும்போது வழியில லோகநாயகியக்கா எடுத்த தீபாவளி சேலையப் பார்த்திட்டுப் போங்கன்னு ஒரே ரகளை. அங்கே நின்னு ஒரு அஞ்சு நிமிஷம் ஆகியிருக்கும். அப்போ பார்த்து தான் நீ கூப்பிட்டிருக்கே."
"ஏம்மா.குப்பையக் கொட்ட நீ தான் போகணுமா? செல்வியக்கா வேலைக்கு வர்லையா? அவங்களுக்கு ஒடம்பு இன்னும் சரியாகலையா?"
"செல்விக்கு வந்த சிக்குன்குனியா, இப்போ நல்லாயிருச்சு. ஆனா அவ பொண்ணு சாந்திக்கு தான் ஏதோ கிட்னில ஸ்டோன் வந்து ஆஸ்பத்திரியில இருக்காளாம். பாவம் செல்விக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டம்.செலவுக்கு மேல செலவு. நான் கூட ஆஸ்பத்திரி போய்,பார்த்துட்டு வந்தேன். ஆஸ்பத்திரியில பக்கத்து பெட்டுல நம்ம எளனீக்கடை குருசாமியோட பொண்ணும் இதே மாதிரி கிட்னில ஸ்டோன் வந்து அட்மிட் ஆகியிருந்தது.
ஆமா,இந்த ஸ்டோன் எதனால வாரது தம்பீ?"
"ஹூம். பொதுவா சிறுநீர் கழிக்கணும்கிற உணர்வு வந்தவுடனே போகாம அடக்கி வச்சிருந்தா அது ஸ்டோனா மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. இது ஒரு முக்கிய காரணம். இது போகப் பல காரணங்கள் இருக்கு. அது சரி இந்தப் பொண்ணுங்க படிக்கிற ஸ்கூலில் முறையான கழிப்பிட வசதி இருக்கா?"
"ஓஹோ. அது தான் விஷயமா? அந்த ஸ்கூல்ல லெட்ரின் எல்லாம் கெடையாது. எல்லாம் திறந்தவெளீல தான் போகோணும். வயசுக்கு வந்த புள்ளைக எப்படிப் போகும்.சாயங்காலம் ஸ்கூல் முடியறவரைக்கும் அப்படியே கட்டுப்படுத்தீட்டு தான் இருக்கும் போல. பாவம். இலவசமா என்னென்னமோ கொடுத்து என்ன பண்றது. இந்த மாதிரி கழிப்பிட வசதியில்லாத பள்ளிகளுக்கு ஏதாவது செஞ்சிருக்கலாம்."
"அதெல்லாம் நமக்கெதுக்கு ம்மா...நேத்தைக்கு சாயங்காலம் நாலு வாட்டி ஃபோன் செஞ்சேன். ஏன் யாருமே எடுக்கலை? கடைக்குப் போயிட்டீங்களா?"
"இல்லை தம்பி. திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவை சுவாரஸ்யமாப் பார்த்திட்டு இருந்தோமா. யாராச்சியும் ஃபோன் பண்ணி தொந்தரவு செஞ்சா என்ன பண்ரதுன்னு நெனச்சி,ஃபோன் ஒயரைக் கழட்டி விட்டிருந்தோம். புரொக்கிராம் எல்லாம் சூப்பரா இருந்திச்சு கண்ணூ. ஆமா..நீ பாக்கலை?"
"நற....நற....நற....நற...."
14 August 2006
| [+/-] |
முன்னாள் நட்சத்திரத்தின் நன்றிகள் |
பத்தாயிரத்து எண்பது நிமிஷங்கள்...
இரண்டாயிரத்து சொச்சம் ஹிட்டுகள்...
சிலருக்குக் கொஞ்ச நேர இளைப்பாறல்கள்...
என்று எனது நடத்திர வாரம் ஒரு வழியாய் நிறைவுக்கு வந்துவிட்டது.
இந்தியா விடுதலை அடையும் சமயத்தில் எனது பதிவுகளினின்று உங்களுக்கும் விடுதலை கிட்டியிருக்கிறது.இந்த மின்மினி திரும்ப தனது பழைய கூட்டிற்கு செல்லவிருக்கிறது.திடீரென முளைத்த அலுவலக சிக்கல்களினால் திட்டமிட்ட படி சில பதிவுகளைப் போட முடியவில்லை.
கல்யாண சமையலில் ஆரம்பித்த வாரம், காணாமல் போனவர்களில் நிறைவு பெறுகிறது.இதில் சில பதிவுகளை மீண்டும் பின்னர் தொடர்வதாய் இருக்கிறேன்.தினப்படி எனது பதிவுகளைப் படித்த, பின்னூட்டமிட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.வாய்ப்பளித்த மதி கந்தசாமிக்கும் காசி ஆறுமுகத்திற்கும் நன்றி பல.அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.
அன்புடன்,
சுதர்சன்.கோபால்
"உங்கள் அனைவருக்கும் எனது இந்திய விடுதலை நாள் வாழ்த்துகள்!"
12 August 2006
| [+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 7 |
"அம்மா.ரொம்ப நாளா இந்த பட்டுப் புடவையை ட்ரை வாஷ் பண்ணணும்னு இருந்தீங்களே..." என்று பெண்பிள்ளை ஆரம்பித்தால் அடுத்து வரப்போவதைத் தாராளமாக ஊகிக்கலாம் - "அந்தப் பட்டுப்புடவையும் திருமண பஃபே விருந்தில் கலந்து கொண்டு பசியாற்றியது" என்று.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
எங்க கீழே சொல்லியிருக்கிற மேட்டர்கள்ள மெய்ப்பொருள் என்ன என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.
1.கல்யாணத்திற்குக் கெளம்பரப்ப தான் ஞயாபகம் வந்திச்சி இன்னைக்கு ஞாயித்துக் கிழமைன்னு.இந்த ஊர்ல எவன் ஞாயித்துக் கிழமையன்னிக்கு கடைய சீக்கிரமே தொறக்கப்போரான்... ஹி.ஹி..
2.நம்ம சூலூர் பிரேஞ்சில உங்களப் போல ஒரு அனுபவஸ்தர் இல்லாமத் தான் குட்டிச்சுவர் ஆகிப்போச்சு.
3.ஸ்போர்ட்சிலயெல்லாம் உங்க பையன் தான் ஸ்கூல்லயே முதல்..
4.அடடா..நீங்க சொல்ரது சரிதான் சார்.ரொம்பத்தான் ஒழுகுது.ரிப்பேர் செஞ்சிட வேண்டியது தான்.
5.ஏம்பா.உங்க பேனா உடையவே உடையாதுன்னு சொல்லீட்டு இருந்தீங்களே...
6.இஸ்திரிக்கு போட்டிருந்த அந்த புளூக் கலரு கட்டம் போட்ட சட்டை புதுசுங்களா???
7.ஆமாம்.காவிக்கலர்ல இந்தச் சேர்ல தான் இருந்தது.நீங்க தான் அந்த கர்ச்சீப்பைப் போட்டு வச்சிருந்தீங்களோ??
8.என்ன சார்.நீங்க ஏறும் போதே தெளிவா சொல்லியிருக்காலம்ல இன்னர் ரிங் ரோடு தான் போகணும்னு.
9.உப்பெல்லாம் புக்ல சொல்லியிருக்கிற அளவு தான் போட்டேன்.ஆனாக்கூட....
| [+/-] |
"காணாமல் போனவர்கள்" ஸ்பெஷல் |
தூர்தர்ஷன் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது.
எல்லா நாள் நிகழ்ச்சிகளினிடயே எதிர்பாராமல் வரும் "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்ற் அறிவிப்புப் பலகையையும்,வெள்ளியன்று "ஒலியும் ஒளியும்" முன்னால் சிவபூசைக் கரடியாக வரும் "எதிரொலி" நிகழ்ச்சியினையும் வெறுக்காத ஆட்கள் இல்லை எனலாம்.இது போல் மறக்க முடியா இன்னுமொரு நிகழ்ச்சி "காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு".எங்கள் வீட்டில் யாருக்குமே பிடிக்காத இந்த நிகழ்ச்சியானது சொல்லத்தெரியாத காரணங்களுக்காக எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
காணாமல் போன தினத்தில் கறுப்பு நிறக் கால்சட்டை அணிந்த சிறுவனின் ஒளிப்பட முகத்தில் தெரியும் மென் சோகம் என்னை என்னவோ செய்த நாட்களும் உண்டு."நான் காணாமப் போயிட்டா பழனீ விஜயா ஸ்டூடியோவில எடுத்த கலர் ஃபோட்டோ தான் TVக்கு தரணும்" என்று எத்தனை முறை சண்டையிட்டிருப்பேனோ எனக்கே தெரியாது?
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் "கண்டேன் சீதையை" என்று வந்த அனுமனுக்குத்தான் முதலிடம் தரப்பட வேண்டும்.இதில் தூர்தஷனுக்கும் அதில் வரும் கா.போ.ப.அறிவிப்புகளுக்கும் எத்தனையாவது இடம் வரும் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது.
சரி,,சரி,,விஷயத்துக்கு வருவோம்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான சிலர் கொஞ்ச நாளாய்க் காணாமல் போய்விட்டார்கள்.அவர்களைக் கண்டுபிடிக்கத் துப்பு கொடுப்பவர்களுக்கு மயில்ஜீயுடன் ஒரு "அதிரடிப் பரிசு"ம் உண்டு.
நபர்1 :- "மூலிகை பெட்ரோல் புகழ்" ராமர் பிள்ளை
மாற்று எரிபொருள் பற்றிய ஆராச்சியில் தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்தவர். 90களின் இறுதியில் இவரது கட்டுரை வாராத வாரப் பத்திரிக்கைகளே இல்லை
எனலாம்.ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் காணாமல் போய் விட்டாரா இல்லை சிறை வாசம் முடித்துவிட்டு வந்து விட்டாரா என்று தெரியவில்லை.துப்பு கொடுப்பவர்களுக்கு "வைக்கோலில் இருந்து சாம்பலை உருவாக்குவது எப்படி" என்னும் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.(ஆமாம் இப்போ இவர் வளர்ப்பு குடும்பம் எப்படி இருக்கு??)
நபர் 2:- ஷ்ரீவித்யா
எம்.எல்.வி. என்னும் ஒரு மாபெரும் இசைக்கலைஞரின் மகளாய்ப் பிறந்து ஒரு நட்சத்திர இயக்குனரால் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிப் பல்வேறு கதாபாத்திரங்களை அனாயசமாக எற்று நடித்த இவரைக் கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ் திரையில் காணவில்லை.கடைசியில் கண் பார்வை இழந்தவராக "லண்டன்" என்னும் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்.உச்ச நட்சத்திரத்திற்கு இணையாக,அக்காவாக,அம்மாவாக நடித்த இவர் அடுத்த படத்தில் பாட்டியாய் நடிக்கவிருக்கிறார் என்று ஒரு பேச்சு அடிபட்டது உண்மையாக இருக்குமோ(ஆமா,ஜெயேந்திரர் வழக்கில இவங்களுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குதுன்னு பேசிக்கிறாங்களே.அது இன்னா மேட்டர்??)
நபர் 3:- அஜீத்ஜோகி
இந்திய ஆட்சியமைப்புத் துறையில் தாழ்த்தப்பட்டோர் கோட்டாவில் நுழைந்த இவர் அப்போதைய மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் அர்ஜூன் சிங்கின் ஆணைக்கேற்ப அரசுப்பணியினை விட்டு அரசியலில் நுழைந்தார்.மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிந்து சென்ற சட்டீஸ்கர் மாநிலத்தின் முதலாம் முதலமைச்சராய் பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்தார்.2003ல் நடந்த தேர்தலில் முதலமைச்சர் நாற்காலியைப் பறி கொடுத்த இவர் 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசியலில் நுழைந்தார்.அப்போது நடந்த ஒரு மோசமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பின்னர் இவரது சௌவுண்டை எங்கும் காணோம்.(அது சரி.சமீபத்தில 25 எம்பிக்களுடன் சேர்ந்து சோனியாதான் பிரதமராகணும்னு நீங்க அனுப்பின மனுவுக்குப் பின்னால உள் குத்து ஒண்ணும் இல்லையே??)
அடுத்து வருபவர்கள் "குத்துவிளக்கு" கோபாலகிருஷ்ணன்,"சின்ன சின்ன ஆசை" மின்மினி,"சிட்டிசன்" ஷரவண சுப்பையா.
வெளியே செல்லவிருப்பதால் "மறுமொழி மட்டுறுத்தல்" கொஞ்சம் தாமதமாவே நிகழும்.பொறுத்தருள்க :-)
| [+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 6 |
இன்றைக்குக் கொறிக்க, "பெங்களூரு" பற்றிய சில தகவல்களும் கேள்விகளும்:
தகவல்கள்:
1)இந்தியாவில் முதன்முதலில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்ட நகரம் பெங்களூர் ஆகும்.வந்த ஆண்டு 1905.
2)அந்தமானில் 1872ல் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரலான மேயோவின் நினைவாகக் கட்டப்பட்டதே எம்.ஜீ.ரோட்டிலுள்ள மேயோ ஹால் ஆகும்.பொது மக்கள் உதவியுடன் கட்டப்பட்ட இது 1883 ஆம் ஆண்டில் அப்போதைய நகராட்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
3)மெஜஸ்டிக் என்று அழைக்கப்படும் இடத்தின் உண்மையான பெயர் காந்திநகர் ஆகும்.அந்த இடத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த மெஜஸ்டிக் டாக்கீஸால் இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது.
4)1760-ல் ஹைதர் அலியால் உருவாக்கப்பட்ட "லால் பாக்கின்" நிஜப் பெயர் என்ன தெரியுமா?
"மேங்கோ டோப் & சைப்ரஸ் கார்டன்"
கேள்விகள்:
1)70களின் பிற்பகுதியில்,பெங்களூரின் இந்தக் குறிப்பிட்ட பகுதியானது ஆசியாவிலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாகக் குறிப்பிடப்பட்டது.அது எந்தப் பகுதி?
2)BTM மற்றும் HSR லே-அவுட்டுகளை விரிவு படுத்துக.
3)பெங்களூரு ஏரிகளினால் ஆன நகரம்....இல்லை.இல்லை. நகரமாக இருந்தது.இப்போது முக்கால்வாசி ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை இருந்த இடங்களில் காங்க்ரீட் கட்டிடங்கள் தான் இருக்கின்றன.கீழே கொடுக்கப்பட்ட ஏரிகளின் மீது தற்போது காணப்படும் பெயர் பெற்ற கட்டிடங்கள் என்ன என்று கண்டுபிடிக்க முடியுமா?
சம்பங்கி ஏரி,தரமம்புடி ஏரி.
4)நான் குறிப்பிடும் இந்த மனிதர் பெங்களூரில் சில காலம் மல்லேஸ்வரத்திற்கும்,பசவன்குடிக்கும் இடையே செல்லும் 14ஆம் நம்பர் அரசுப் பேருந்தில் வேலை பார்த்து வந்தார்.இவரது விசில் ஊதும் அழகைப் பார்க்கவே கூட்டம் இவரது பேருந்தில் அள்ளுமாம்.இவர் யார்??
| [+/-] |
ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசு" - பகுதி 2 |
வினோத்தோட மேனேஜர் பேசுகிறேன்:
உங்க கிட்ட வினோத் ஏதோ சொல்லீட்டு இருந்தான் போல இருக்கு.என்னைப் பார்த்ததுமே நழுவிட்டான்.என்ன சொன்னான்னு நான் உங்ககிட்ட கேட்கக்கூடாது.அது அநாகரீகம்.அவன் சொன்னதக் காது கொடுத்துக் கேட்ட நீங்க,நான் சொல்லப் போறதையும் கொஞ்சம் கேளுங்களேன்.
இன்று காலை 10:45 மணி:
நான் செஞ்சதை என்னாலயே நம்ப முடியலை.கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் போலிருக்கு.வெறுமனே என்னோட மொபைல் நம்பர் மட்டும் கொடுத்திருக்கலாமோ?என்ன செய்ய ஒரு தடவை "சென்ட்" பட்டனை அமுக்கிய பிறகு கன்ட்ரோல் நம்ம கிட்ட இல்லையே.சரி.என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே
"ஹலோ.யெஸ் சார்..ஓக்கே சார்.இப்போ வர்ரேன்".
நேரம் காலம் தெரியாம இந்த நேரம் பார்த்து ஆந்தைகண்ணன் கூப்பிடறான்.வேற
யாருமில்லை.என்னோட பாஸ் தான்.எதுக்காக இருக்கும்??
நான் போயிட்டு வந்திடறேன்.அதுக்குள்ள நீங்க போய் தமிழ்மணத்தில புதுசா எதுனாச்சி வந்திருக்கான்னு பார்த்திட்டு வந்திடுங்க.
11:45 மணி:
என்னோட பாஸ் சொன்னத இன்னும் என்னால நம்பவே முடியலை.நான் வெளிநாடு போக முயற்சி செஞ்சிட்டு இருக்கறதப் பத்தி இவருக்கு எப்படித் தெரிய வந்தது.யாராவது போட்டுக்கொடுத்திருப்பாங்களா?இல்லைன்னா அது பத்தி இவர் ஏன் அதுவும் திடீர்னு இன்னைக்கு கேக்கறாரு?எனக்கென்னமோ இந்த வினோத் மேலயும் செபாஸ்டியன் மேலயும் தான் கொஞ்ச சந்தேகமா இருக்கு.செபாஸ்ட்யன் வேற நான் ரெண்டு மூணு வாட்டி கன்சல்டன்ட் கிட்ட பேசரதப் பார்த்திருக்கான்.அதுவும் தவிர எனக்குத் தெரிஞ்சவரை இந்த ஆஃபீஸில என்மேல காண்டு இவனுங்க ரெண்டு பேருக்குத் தான்.ஹூம்.இப்ப என்ன செய்யலாம்???
அட வைப்ரேட்டர் வேற சத்தம் போடுது.செந்தில் தான் கூப்பிடறான்."சொல்லு செந்தில்.ஆமாம்.நான் பெரிசு கூடப் பேசிட்டு இருந்தேன்.நானே உன்னைக் கூப்பிடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.மேட்டர் என்னங்கறத நான் கேன்டீன்ல சொல்றேன்.இல்லை இன்னைக்கு நான் கார்ல தான் வந்திருக்கேன்.ஓக்கே...பை..."செந்தில் என்னோட மூணாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை ஒண்ணாப் படிச்சவன்.பல இடங்கள்ள குப்பையைக் கொட்டிட்டு ஆறு மாசம் முன்னாடி தான் எங்க கம்பெனியில சேர்ந்தான்.வேற,வேற கட்டிடத்தில வேலை செஞ்சாலும்,அப்பப்போ கேன்டீன்ல சந்திச்சுக்குவோம்.நீங்களும் என் கூட கேன்டீனுக்கு வாங்க.உங்களுக்கு வேணும்கிற எல்லா ஐட்டமும் கிடைக்கும்.0f course dutch treat தான்.
"என்ன விஷ்வா.ரொம்ப டல்லா இருக்கே.ஏதாவது பிரச்சினையா?"
"ஆமா செந்தில்.பெரிசுக்கு நான் வெளிநாடு போகறதுக்கு முயற்சி செஞ்சிட்டு இருக்கற விஷயம் எப்படியோ தெரிஞ்சுபோச்சு.யாரோ என் டீம்ல இருந்து தான் போட்டுக் கொடுத்திருக்காங்க.பக்கா ப்ரூஃபோட பேசுது பெரிசு.எவனோ கூட்டுக்களவாணிக மொட்டைக் கடிதாசு மாதிரி ஏதோ ஒண்ணைப் போட்டு என்னோட விக்கெட்டை சாச்சிட்டாங்க.சே...."
"சரி....சரி...விஷ்வா...அந்த சாஸைக் கொஞ்சம் இப்படித் தள்ளு.அப்புறம் உங்க பெரிசு அதுக்கு என்ன சொல்லிச்சு?நீ மொட்டைக் கடிதாசுன்னு சொன்னதும் தான் எனக்கு நம்ம சாந்தா டீச்சர் ஞாபகத்துக்கு வாராங்க.ஆமா..அந்த மேட்டர் நடந்து ஒரு பதினெட்டு வருஷம் இருக்குமா??"
"செந்தில் திஸ் இஸ் டூ மச்,மனுஷன் இங்கே குழப்பத்தில கொந்தளிச்சுட்டு இருக்கேன்.நீ பாட்டுக்கு சிரிச்சுட்டு பழைய குப்பையக் கிளறீட்டு இருக்கே??"
செந்திலுக்கு அபார ஞாபகசக்தி.ஆன தேவையில்லாத விஷயங்களைத் தான் அதிகமா மெமரில ஏத்தி வச்சிருப்பான்.அவன் சொன்ன அந்த விஷயம் நாங்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.மொட்டைக் கடிதாசுன்னு பேச்சு வந்தாலோ இல்லே எங்கேயாவது அதப் பத்தி படிச்சாலோ எனக்கு உடனே சாந்தா டீச்சர் தான் ஞாபகம் வருவாங்க.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது:
"டேய்...விஸ்வநாதா இது தப்பில்லையா??"
"செந்தில்.நீ அனியாயத்துக்கு பயந்தாங்கொள்ளியா இருக்கியேடா.உங்கப்பா மிலிட்டரில இருக்கிறார்.நீ என்னடான்னே இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் போய் பயந்திட்டு இருக்கியே?நாலு பேருக்கு நல்லது செய்யற மாதிரி இருந்தா எந்த ஒரு விஷயமும் தப்பில்லைன்னு எங்க தலைவரே நாயகன்ல சொல்லியிருக்காரு.அதனால இது தப்பில்லை"
"அது சரி.நாலு பேருக்கு நல்லது செய்யற விஷயம் தான தப்பில்லை.இங்கே நானு,நீ ரெண்டு பேரு தான் இருக்கோம்.விஸ்வநாதா எனக்கென்னமோ இது கொஞ்சம் ஓவராய்த் தோணுது."
"அடச்சே..ஏண்டா பொட்டைப்புள்ளை மாதிரி பயப்படுதே???எங்க அப்பா நம்ம பழைய லைப்ரேரியன் சரியான நேரத்துக்கு வர மாட்டேங்கிறார்னு மொட்டைப்பெட்டிஷன் எழுதிப்போட்ட பொறவு தான் அந்த லைப்ரேரியனுக்கு கவுர்மென்டில ரிவிட் அடிச்சாங்க.இப்போ பாரு எப்படி டாண்ணு நேரத்துக்கு வந்திடறாரு.உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா?அந்த லெட்டரை என்னை வச்சித் தான் எழுதினாரு எங்க அப்பா. அது மாதிரி நம்மளையே எப்போ பார்த்தாலும் குறி வச்சு ரிவிட் அடிக்கிற சைன்ஸ் டீச்சருக்கு வக்கிற ஆப்பு தான் இந்தக் கடிதாசு"
"வெறும் கடிதாசு இல்லை.மொட்டைக் கடிதாசுன்னு சொல்லுடா.யாரோ வார மாதிரியிருக்கு.உள்ளே பாக்கெட்ல வச்சுக்கோ"
ஆம்.எங்கள் ஒன்பதாம் வகுப்பு "ஆ" பிரிவுக்கு அறிவியல் பாடம் சொல்லித்தர புதிதாய் வந்திருக்கும் சாந்தா டீச்சர் தான் எங்களது மொட்டைக் கடிதாசியின் இலக்கு.பின்னே என்னவாம்???அறிவியல் பாடமே சுட்டுப் போட்டாலும் வராத மக்குகள் பலரிருக்க,சுமாராய்ப் படிக்கும் எங்களையே குறி பார்த்து ஒவ்வொரு வகுப்பிலும் அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவதை என்னால் மறக்கவே முடியாது.புதுசாத் தாவணி போட்ட குமரிகள் முன்னால்,இன்னமும் திருமணம் ஒரு டிச்சர் கையால் அடி வாங்குவதை எத்தனை நாள் தான் பொறுத்துக்கொள்வது.
அப்பா சொல்படி மொட்டைப் பெட்டிஷன்கள் பல எழுதிய அனுபவம் உள்ள எனக்கு,இதெல்லாம் வெறும் ஜூஜூபியாய் இருந்தது.எங்கள் திட்டத்தின் படி ஒரு அரையாண்டுப் பரிச்சை விடுமுறை ஆரம்பிக்கும் சமயம்,இது போல ஒரு கடிதாசியை எழுதி அனுப்பிவிட வேண்டும்.
என்னன்னு எழுதறது...???ஹூம்..புதுசா வந்த பீ.டி.மாஸ்டருக்கும் நம்ம சையின்ஸ் டீச்சருக்கும் கசமுசான்னு எழுதுவோம்.அப்போ தான் விஷயம் இன்னும் பெரிசாகும்.பீ.டி.மாஸ்டருக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை.எப்போ ஸ்டாஃப்ரூம் போனாலும் ஏதோ பாலமுருகன் புத்தகங்களைப் பத்தி ரெண்டு பேரும் சதா அரட்டை அடிச்சிக்கிட்டே இருக்காங்க.அதுவும் தவிர ரெண்டு பேரும் வேற வேற ஜாதி.
அது சரி...யாருக்கு அனுப்புவது ?? தலைமை ஆசிரியருக்கு..சே..அந்த ஆள் பொண்ணுங்களைப் பார்த்தாலே மூத்திரம் குடிச்ச மாடு மாதிரி குழைவான்.திட்டம் படுதோல்வி ஆகிடும்..ஊர் ப்ரெசிடன்டுக்கு அனுப்புவோமே.சே..அந்த ஆளுக்குக் குடும்பத்திலேயே பல சிக்கல் இருக்கு.இதில எங்கே இதையெல்லாம் கவனிக்கப் போறாரு.பேசாம சாந்தா டீச்சர் வீட்டுக்கே அனுப்பிட வேண்டியது தான்.அவங்க அப்பா வேற செம ஸ்ட்ரிக்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.விஷயம் தெரிங்சதும் அவங்க அப்பா டீச்சரை வேற ஊருக்கு மாத்தல் வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாரு,இல்லை டீச்சர் கொஞ்ச நாளைக்கு எங்களை அடிக்காம தன்னோட சொந்த துக்கத்தில மூழ்கிக் கிடப்பாங்க.
அப்புறமென்னா எங்க காட்டில தெனம் தெனம் மழை தான்.
திட்டத்தின் படி,எங்கள் அரையாண்டுப் பரிச்சை முடிந்த ஒரு சுபயோக சுபதினத்தில் எனது இடது கையினால் எழுதிய அந்த மொட்டைக் கடிதாசியினை பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பழனிக்குச் சென்று போஸ்ட் செய்துவிட்டு வந்தோம்.போஸ்ட் செய்த மறு நாளே நான் தாத்தா ஊருக்கும்,செந்தில் தனது மாமா ஊருக்கும் பயணப்பட்டோம்.எனது உடல் தான் தாத்த ஊரில் இருந்தது.முழு மனசும் டீசச்ர் வீட்டில் லெட்டர் கிடைத்ததா,அதற்குப் பின்னால் டீச்சருக்கு என்ன ஆயிருக்கும் என்பதைப் பற்றியே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.
(தொடரும்)
11 August 2006
| [+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 5 |
1)விஸ்வனாதன் - ராமமூர்த்தி இணை பிரிந்ததும் இருவரும் தனித்தனியாக இசையமைத்த படங்கள் எவை?
2)"உள்ளத்தை அள்ளித்தா" - ஒரு பழையபடத்தின் டிட்டோ காப்பி ஆகும்.அந்த ஒரிஜினல் படம் எது?
3)"ராசாத்தி,என் உசிரு என்னுதில்லை" திருடா-திருடாவில் இடம் பெற்ற இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்ன?
4)தஞ்சைப் பெரியகோவிலைப் பற்றிய நீண்ட காலம் மக்களிடையே பேசப்பட்டு வந்த ஒரு விஷயம்,பொய்யான ஒன்று அறிஞர் பெருமக்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.நான் எதை பற்றிக் குறிப்பிடுகிறேன்?
5)ஜெயலலிதா நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் எது?
சொன்னாங்க...சொன்னாங்க
1) " My plight is like Draupadi's.Everyone watched her being disrobed but no one helped."
--- 1998 மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்ட நிலையில் P.V.நரசிம்மராவ்
2) " The wife has not won.I have handed her husband back to her on a golden platter."
--- அமிதாப்,ஜெயா பச்சன் தம்பதியர் பற்றி ரேகா 1987-ல்
3) "The Rashtrapathi bhavan should not be treated like a nursing home.Of late,it has unfortunately became a den of the retiring old."
--- ராம் ஜெத்மலானி 1992-ல்
4) " From a buffalo's back I have landed into a helicopter. This is real democracy"
--- 1993ல் பீகார் முதல்வரான பின் லாலூ யாதவ்
| [+/-] |
ஆப்பரேஷன் "மொட்டைக் கடிதாசு" |
வினோத் பேசுகிறேன்:
நேற்று இரவு 11.30 மணி:
"ஆப்பரேஷன் சக்ஸஸ்,Fwded தலை'ஸ் மெயில் டூ பெர்சு" என்னும் குறுஞ்செய்தியை வாசித்ததும் செபியுடன் உடனே பேச வேண்டும் என்னும் ஆர்வம் மனத்தில் பீறிட்டுக் கிளம்பியது.இரவு 10 மணி வாக்கில் அனுப்பப்பட்ட தகவலானது என்னைச் சேர்ந்த நேரமோ மனி 11.15.இதற்கு மேல் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம்;காலையில் அலுவலகத்தில் போய் பேசிக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து விட்டு உறங்கப் போனேன்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.அது சரி இந்த நல்ல செய்திக்குத் தானே கடந்த 168 மணி நேரமாய்க் காத்துக் கொண்டிருந்தோம்.காரியம் நல்லபடியாய் முடிந்ததைக் கொண்டாடாமல் எப்படித் தூங்க முடியும்?
என்னடா இவன் ஓவராகப் பில்ட்-அப் கொடுக்கிறானே என்று பார்க்கிறீர்களா?
விஷயம் பெரிதாக ஒன்றுமில்லை.அடியேனுக்கும்,செபி அலையஸ் செபாஸ்டியனுக்கும் சமீபத்தில் நடந்து முடிந்த வருடாந்தர அப்ரெய்ஸலில் புதிதாக எங்களுக்கு வந்த மேனேஜர் அல்வா கிண்டி கொடுத்து விட்டார்(வழக்கம் போலவே).இதைவிடக் கேவலமான உத்யோக ரேட்டிங் கார்டை இதுவரை யாரும் வாங்கியிருக்கவே மாட்டார்கள்.
என்னதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும்,மேலாளர்களுக்கு சோப்பு போடாத அவர்களைக் காக்காய் பிடிக்காத எல்லாருக்கும் கம்பெனி வேறுபாடின்றி நிகழ்வது தான் இது.என்னைப் பொறுத்தமட்டிலும் சோப்பு போடுவது என்பது பிடிக்காத,எனக்கு சுட்டுப் போட்டாலும் வராத ஒரு சமாச்சாரம்.
போன வருடமும் இதேபோல் இதற்கு முந்தைய மேனேஜரால் தரப்பட்ட மோசமான பின்னூட்டத்தினால் எனக்கு வரவிருந்த பணி உயர்வும் அது சார்ந்த சௌகர்யங்களும் பறி போனது.சரி அடுத்த முறை பார்த்துக் கொள்வோம் என்று ஒரு வருடம் இலவு காத்த கிளியாய் இருந்த எனக்கு இந்த முறையும் அதே அல்வாவை வேறு ஒருவர் அழகாய்க் கிண்டித் தந்தார்.செபியின் கதையைக் கேட்கவே வேண்டாம்.அவனுடைய காதலி இருக்கும் சென்னை கிளைக்கு மாற்றல் வேண்டி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தினை,ஏதோ சொத்தை காரணம் காட்டி நிறுத்திவிட்டார். எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் சித்தாந்தத்தின் படி நானும் செபியும் இத்தகைய ஒரு சூழலில் போட்ட ஆப்பரேஷன் தான் இது.
ஒரு வாரத்திற்கு முன்னால்,காலையில் 11.30 மணி:
"டேய் செபி,உண்மையாவா சொல்றே?"
"மொதல்ல அந்த மேட்ச் பாக்சை இப்படிக் கொடு.தல செல்ஃபோன்ல குசுகுன்னு யாரோ கன்சல்டன்ட் கிட்ட பேசினதக் கேட்டிட்டுத் தான் இருந்தேன்.சம்பளம் பத்தியும் ஓவரால் பெனிஃபிட்ஸ் பத்தியும் கேட்டது என் காதில ஸ்பஷ்டமா விழுந்தது.நான் பார்க்கறென்னு தெரிஞ்சதுமே யாரோ பேங்க் ஆளு கிட்ட பேசற மாதிரி மனுஷன் இன்ட்ரெஸ்ட் ரேட் பத்தி விசாரிக்க ஆரம்பிசிட்டான்.சரியான டகால்ட்டி டாக் அது.அப்புறம் நம்ம ரெட்டி கூட தலயை போன வாரம் "இன்னவேட்டர் பில்டிங்ல" ஃபுல் பார்மல்சில பார்த்ததா சொன்னான்.கிளையன்ட் மீட்டிங்குக்கே செப்பல்சில வர்ர ஆளு,அங்கே ஷூ எல்லாம் போட்டிட்டு என்ன பண்ணியிருப்பான்??"
"ஹூம்.நீ சொல்றத வச்சிப் பார்க்கும் போது பட்சி வெளியே பறக்கத் திட்டம் போடுதுன்னு நினைக்கிறேன்.பறந்து போறதுக்குள்ள அதுகிட்ட கொஞ்சம் வெளையாடிப் பார்த்தாத்தான் என்ன?செபி சேட்டா எனிக்கு ஒரு ஐடியா தோணுது"என்று உருவானது தான் இந்த ஆப்பரேஷன்.
என்ன ஜேம்ஸ்பாண்ட் பட எஃபெக்ட் கிடைக்கிறதா??(சரி..சரி...எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் இருக்கு)
மற்ற நண்பர்களைக் கலாய்ப்பதற்காக, செபி பல்வேறு பெயர்களில் மின்னஞ்சல் கணக்குகளைத் ஜீமெயிலில் துவக்கி வைத்திருப்பான்.அதில் ஒன்று தான் எங்கள் ஆப்பரேஷனுக்கு உதவப் போகும் ஒரு ஒரு தனியார் ஜாப் கன்சல்டன்டின் மின்னஞ்சல் முகவரி.
அந்த முகவரியிலிருந்து எங்கல் தலக்கு "வெளி நாட்டு வேலை வாய்ப்புகள்" பற்றிய ஒரு மயிலைத் தட்டி விட்டு அதற்கு தலயிடமிருந்து ரெஸ்பான்சினையும் கூடவே அதனுடைய பயோடேட்டாவினையும் பெறுவது தான் ஆப்பரேஷனின் முதல் இலக்கு.அப்படி தலயிடமிருந்துவந்த மயிலினை தலயின் தலையான பெரிசுக்கு அனுப்பி வைப்பதுதான் எங்கள் ஆப்பரேஷனின் இறுதி இலக்கு.
"வினோ.சரி நம்மோட மெயிலுக்கு மயங்கி தலையும் அவரோட CV-ய அனுப்பிடறாரு.அதை பெருசுக்கு forward பண்றதனால என்ன லாபம்?ஏதோ வயாக்ரா மாத்திரை,ஜேக்பாட் அடிச்சிடுச்சு அப்படின்னு தினமும் வர்ர ஸ்பேம் மெயில்கள்ள ஒண்ணுனு நினைச்சி டெலீட் செஞ்சிட்டார்னா?"
"செபி.இப்பெல்லாம் மேனேஜர் லெவல்ல வேலை மாற்றும் ஆளுங்களோட ப்ரொஃபைல் சரியாத்தான் இருக்கா இல்லை ஏதாவது மொள்ளமாரித்தனம் பண்றாங்களான்னு கண்டுபிடிக்க நெறைய பேக்கிரவுண்டு செக் செஞ்சிட்டு இருக்காங்க.அப்படி நம்ம தலையோட பேக்கிரவுண்ட் செக்குகாகத் தான் இந்த மயிலை அனுப்பறோம்னு தெளிவாச் சொல்லீடுவோம்.நாம பெருசுக்கு அனுப்பற மெயில்ல இந்த மாதிரி உங்க கம்பெனியில உங்க கீழ வேலை செய்யும் இவர்,புதிய வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.இவரோட ஃப்ரொபைலையும் அனுப்பியிருக்காரு.இது கரீக்டான்னு பார்த்துச் சொல்லௌங்களேன் அப்படின்னு ஒரு பிட்டைப் போடுவோம்"
நான் சொல்லி முடித்தது தான் தாமதம்.இதற்காகவே ஜென்ம ஜென்மங்களாய்க் காத்திருந்தது போலத் துள்ளிக் குதித்தான் செபி.
"அடிப்பொளி சேட்டா,சூப்பர் ஐடியா மச்சி,இது மட்டும் சக்ஸஸ் ஆச்சு உனக்கு ஒரு பெரிய ட்ரீட் தர்ரேன்".
"செபி.முதல் கட்ட நடவடிக்கையின் படி நம்ம தலைக்கு ஒரு ஜாப் கன்சல்டன்ட் கிட்ட இருந்து அனுப்பின மாதிரி ஒரு மெயில் ரெடி பண்ணு.நான் போய் ஒரு தம் போட்டிட்டு வந்திடரேன்".மனம் முழுக்க ஒரு சாதனையைச் செய்த நிறைவு.முழு சிகரெட்டினையும் இழுக்க முடியாமல் பாதியிலே திரும்ப செபியின் இருக்கைக்கு வந்தேன்.ட்ராஃப்ட் காப்பியுடன் தயாராக இருந்தான் செபி.
"சான்ஸே இல்லை.இந்த மாதிரி ஒரு மெயிலைப் பார்த்தா நம்ம தல மட்டும் இல்லை.நம்ம பெரிசுக்கே சபலம் வந்திடும்.சரி தலயோட பெர்சனல் ஐ.டி. தெரியுமா உனக்கு"
********@hotmail.com தானே??
"அத்தே தான்.ரெடி...ஒன் டூ த்ரீ...இப்போ சென்ட் பட்டனை அமுக்கு."
"அப்பாடா.ஒரு வழியா அனுப்பிட்டேன்.வினோ,இப்பவே கேன்டீன் போய் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடலாம்."
இன்று அலுவலகத்தில்,காலை 10 மணி:
"செபி, ஏன் இவ்ளோ லேட்டா வர்ரே?என்ன நைட்டு ஓவர் தண்ணியா??"
"வினோ,உனக்கே இதெல்லாம் ஓவராத் தெரியலை.நம்ம வாத்யாரோட ஜூனியருக்கு இன்னைக்குப் பிறந்த நாளாம்.சாயங்காலம் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கார்.கிஃப்ட் வாங்கப் போயிருந்தேன்.நேத்து கூட இதப் பத்தி பேசீட்டு இருந்தோமே..சரியான பட்ட்ர் நீ..."
"சரி...சரி.ரிலாக்ஸ் மேன்.எங்கே நம்ம தல கிட்ட வந்த மெயிலைக் காமி."
"இங்கே பாரு.இந்த மெயில் தான்.பயங்கர டெஸ்பரேட்டா வேலை தேடீட்டு இருக்கார் போலத் தோணுது.பாரேன்... முகம் தெரியாத ஒரு அனானிமஸ் மெயிலை நம்பி அவரோட முழு ப்ரொஃபைலையும் அனுப்பி இருக்கார்.சரி இந்த மெயிலை இப்போ என்ன பண்ணலாம் வினோ?"
"அப்படியே Fwd பட்டனை அமுக்கி நாம அன்னைக்கு முடிவு செஞ்சு வச்ச மாதிரி ஒரு மெயிலைத் தட்டி நம்ம பெரிசோட அஃபீஷியல் மெயில் ஐ.டிக்கு அனுப்ப வேண்டியதுதான்."
அப்படி அனுப்பிய நாற்பதாவது நிமிடத்தில் எங்கள் தல பெரிசின் அறைக்குள் சென்றது.அந்த நாற்பது நிமிடங்களும் எங்களுக்கு யுகங்களாய்க் கழிந்தது.
"வினோ.பெரிசு நாம அனுப்பின மெயிலை முழுசா நம்பிட்டார் போலத் தோணுது"
"எப்படிறா சொல்றே?"
"தல, பெருசு ரூமுக்குள்ளார போய் இருபது நிமிஷம் ஆச்சு..இன்னும் காணோமே" என்று சொல்லி முடிப்பதற்குள் வாயெல்லாம் பல்லாக வெளிப்பட்டார் எங்கள் தல.அதற்குப் பிறகு எங்களுக்குக் கையும் ஓடவில்லை;காலும் ஓடவில்லை.
பெரிசு கண்டிப்பாகக் கடித்துக் குதறி இருப்பாரே?கடி வாங்கிய பிறகும் மனிதர் சந்தோஷமாக இருக்கிறாரே???உள்ளே என்ன நடந்து இருக்கும்?
கடிக்க எனக்கு பன்னிரெண்டு நகங்கள் போதவில்லை....
(தொடரும்)
*************************************************************
உள்ளே அப்படி என்ன ஆச்சு???கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்....
*************************************************************
10 August 2006
| [+/-] |
கொறிக்கக் கொஞ்சம் "ஓ"மப்பொடி - 4 |
தாத்தாவின் வைப்பாட்டி வீடு
சாயக்காரர் தெருவில்
கண்கள் நிறைய மை
மூக்கில் இருபுறமும் மூக்குத்திகள்
எப்போதும் வாயில் வெற்றிலை
அவள்வீட்டுக்குப் போய் வருவதென்றால்
எங்களுக்கு சொர்க்கம் போல
என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும்
"மொதலாளிகளோட சின்னவுக பிள்ளை"
அக்கம்பக்கம் என்னை அறிமுகம் செய்வாள்
அஞ்சாம் வகுப்புப்பையன் நான்
வாங்க ராசா என்பாள்
தாத்தா இருக்கும் போது
போகக்கூடாது யாரும்
"இங்க என்னடா ஒனக்கு ஜோலி"
என விரட்டுவார்
"என்னைப் பார்க்க வந்திருக்கு பிள்ளை
இருக்கட்டுமேயே"யென்று இழுத்துக் கொள்வாள்
மீன் குழம்பு ஊற்றி
சோறு பிசைந்தது தருவாள்
"கோழி அடிச்சிருக்கேன் பாட்டிக்கு
கொண்டு போறீகளா" என்பாள்
என் எதிரிலேயே சேலை மாற்றுவாள்
வெட்கப்படும் என் குஞ்சு தொட்டு
கேலி பண்ணிச் சிரிப்பாள்
திடீரென்று ஒருனாள் யாரும்
அவள் வீட்டுக்குப் போகக்கூடாது என்றார்கள்
தாத்தாவும் போகாமல் இருந்தார்
எனக்குப் போய்
அவள் வீட்டு ஊஞ்சலில்
ஆடவேண்டும் போலிருந்தது
யாருக்கும் தெரியாமல் போனேன்
எவரோ ஒருவர் படுத்திருக்க
அவள் விசிறிக் கொண்டிருந்தாள்
"வாங்க என் சின்னராசா"
எப்போதும் போல் அழைத்தாள்
வெறித்துப் பார்த்தேன் பின்
வெறுப்புடன் வெளியில் ஓடினேன்
பலதெரு தாண்டினேன்
ஒருமுனையில் நின்றேன்
மூத்திரம் கழித்தேன் வெகுநேரம்.
-- ஸ்டெல்லாபுரூஸின் "வீட்டுக்குள் ஒரு கல்வெட்டு"
------------------------------------------------------------------------------------------------
இந்த அறுவர் கூட்டணி யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.
| [+/-] |
"மாருதி"யின் கதை |
14 திசம்பர் 1983 - இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றைப் பொறுத்தமட்டிலும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.
தினம் தினம் சந்தையில் அறிமுகமாகும் அல்ட்ரா மாடர்ன் கார்களை இன்றைய இந்திய இளைஞர்கள் அலுப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்.இன்னமும் புதிய மாடல்கள் சீரான கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப் படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்தங்களது வண்டியில் எந்த ஒரு சிறு இடர்பாடோ அல்லது பழுதோ சரியான நேரத்தில் சிறப்பான முறையில் விற்பனைக்குப் பிந்திய சர்வீஸால் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் பெருங்கவனம் செலுத்துகின்றனர்.பாவம்,23 வருடங்கட்கு முன்னால் இந்தியாவில் வெறும் இரு கார் மாடல்கள் மட்டுமே இருந்தது என்பதனையோ,பிரீமியர் பத்மினி ரக வண்டியை வாங்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதனையோ அல்லது நுகர்வோர்கள் கார் தேவைக்காகத் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்னும் நினைப்பில் ஆட்டம் போட்ட டீலர்கள் பற்றியோ அறியாதவர்கள்.
இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் நான்கு சக்கர சொகுசு வாகனச் சந்தையில் அப்போது ஒரு இக்கட்டான சூழல் நிலவி வந்தது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.நடுவண் அரசின் சோஷலிசத்தினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளே இதற்கு முழு முக்கிய காரணம்.சிகப்புநாடா ராஜ்ஜியத்தில், ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட காரானது பட்டியலில் கடைசி இடத்தினைப் பெற்றது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை. பற்றாக்குறைகள் நிறைந்த,திறம் குறைந்த பொதுப் போக்குவரத்து வசதியினையே, மக்கள் பெரிதும் உபயோகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்த அரசு வேறு என்ன செய்யும்?உலகளாவிய கார் உற்பத்தித்துறையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் சிலர் காரில் செல்வது பற்றிய கனவுகளில், எப்போதும் போல அமிழ்ந்திருந்தனர்.
அப்புறம் என்ன ஆச்சு??
ஒரு ஏர்-க்ராஷில் சஞ்சய்காந்தி இறந்தபின்னர் இந்த நிலைமை மாறத்தொடங்கியது.1970-ஆம் ஆண்டின் போது சஞ்சய்காந்திக்கும் மற்றும் வேறு இரண்டு பேருக்கும் கார்கள் உற்பத்தி செய்வதற்கான உரிமம் அரசால் வழங்கப்பட்டது.அந்த உரிமமானது செயல்முறைப் படுத்தப்படுவது சிவப்பு நாடா சிக்கல்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.அவசரநிலைப் பிரகடனம் மற்றும் அதன் பின்னால் வந்த ஜனதா அரசு என பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையேயும், சஞ்சய் காந்தியின் மாருதி லிமிட்டெட் நிறுவனமானது கார்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வந்தது.மற்ற இருவரும் அந்த முயற்சியில் கூட ஈடுபடவில்லை.1977ல் மாருதி லிமிட்டெட் நிறுவனம் லிக்குவிடேஷன் ஆனது.1980ல் சஞ்சயின் மறைவுக்குப் பின்னால் சஞ்சயின் கனவினை நனவாக்குவதில் தீவிரமாக ஈடுபடலானார் இந்திரா காந்தி.
பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் அந்த நிறுவனத்தின் சொத்துகள் அனைத்தும் அரசின் வசம் வந்தது.இப்படியாக 100சதவிகித அரசாங்கப் பங்குகளுடன் மாருதி உத்யோக் லிமிட்டெட்(MUL) தொடங்கப்பட்டது.வாகன உருவாக்கத்தில் வெளிநாட்டுத் தொழில்நுட்பமும்,முதலீட்டு ரீதியாக 40 சதவிகித ஈக்வெட்டிக்கு ஒரு வெளிநாட்டுப் பங்குதாரரும் MUL-க்குத் தேவைப்பட்டனர்.இவை எல்லாம் அப்போது இருந்த சோஷலிசம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு முரணானது என்பதினை நினைவில் கொள்க.
ஒருபுறம், இந்திய நுகர்வோரின் கார் சம்பந்தமான தேவைகளைக் கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மறுபுறம் தொழில் நுட்பம் வழங்கக்கூடிய ஒரு பார்ட்னருக்கான தேடுதல் உலக அளவில் நடந்தது.இறுதியாக ஜப்பானைச் சார்ந்த சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்ப உரிமம் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தமும்,இருவரும் இணைந்து கூட்டாய் ஒரு நிறுவனம் அமைப்பது சார்பாக ஒரு ஒப்பந்தமும் கையொப்பமிடப்பட்டது.14-திசம்பர் 1983ல், அப்போது இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் முதல் மாருதி800 கார் வெளியிடப்பட்டது.அதற்குப் பிறகு பல நிகழ்ந்தது எல்லாம் வரலாறு மறக்காது.
இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று இந்திய நடுத்தரமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர்.கார்களுக்கான உள்ளூர் தேவை எல்லா எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கியது.MUL,களத்தில் இறங்கும் போது ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கார்கள் என்ற இலக்குடன் இறங்கியது.அதற்கு முந்தைய 10 வருடங்களில் வெறும் 35000 - 40000 என்று தேக்க நிலையில் இருந்த மொத்தக் கார் மார்க்கெட்டை வைத்துப் பார்க்கும் போது இந்த இலக்கு சாத்தியமே இல்லை என்று பல "அறிஞர் பெருமக்கள்" திருவாய் மலர்ந்தருளினார்கள்.ஆனால் அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் ஆச்சரியத்தால் வாயைப் பிளக்கும்படி அமைந்தது அந்தக் காரின் வெற்றி.மாருதி800 வேண்டி முன்பதிவு செய்து நீண்ட காலம் காத்திருத்தல்,காரின் மீதான ப்ரீமியம் போன்றவை பல காலம் தொடர்ந்தது.காலங்கள் உருண்டோடின.1984ல் ஆம்னி,1985ல் ஜிப்ஸி,1993ல் ஜென் என்று புதிய மாடல்கள் சீரான காலகட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்டன.
பெருகும் நடுத்தரவர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் வெளியான முதல் கார் மாருதி800 எனலாம்.இதுதான் அதனுடைய வெற்றிக்கு மூலகாரணம்.அதிக நம்பகத்தன்மை,வண்டியை இயக்குவதில் இருக்கும் எளிமை மற்றும் பெண்மை கலந்த வெளிப்புறத் தோற்றம் போன்ற குணாதிசியங்கள் பெண்களையும் மாருதியின் பால் ஈர்த்தது.தரத்தில் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத ஜப்பானியத் தொழில்நுட்பம்,விற்பனைக்குப் பிந்திய சிறந்த சர்வீஸ் என்ற பண்புகள் மேல்தட்டு வாடிக்கையாளர்களையும் கவர்ந்தது.1994க்குப் பின்னால் அசுரவேகத்தில் அதிகரித்த மாருதியின் வளர்ச்சியைக் கண்ட,உலகளாவிய கார் உற்பத்தியாளர்கள் இந்தியா என்ற மாபெரும் சந்தையின் சக்தியினை அப்போது தான் உணர்ந்தனர்.அதற்குப் பிறகு நடந்ததனை நாடு அறியும்.
சொந்தமாக ஒரு கார் என்னும் பலரது கனவினை நனவாக்கிய மாருதிக்கு ஒரு பெரிய "ஓ..."
தகவல் உபயம்:கூகிளான்டவர்,MUL இணையத் தளம் மற்றும் பொழுது போகாத பூங்காவனம்


